உயிரோடு கொளுத்திய சாமியார்.. சைக்கோ படத்தை மிஞ்சிய பாரதிகண்ணம்மா

விஜய் டிவியின் ராஜா ராணி 2 மற்றும் பாரதிகண்ணம்மா சீரியலின் மகா சங்கமம் கடந்த வாரம் முதல் இந்த வாரமும் தொடர்கிறது. இந்த இரண்டு சீரியல்களும் இணைவதால் ஒரு மணி நேரத்தை சுவாரசியமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக சீரியலின் இயக்குனர் கொடூரமாக யோசித்து கதையில் விறுவிறுப்பை கூட்ட முயற்சிக்கிறார் இயக்குனர்.

இதில் சந்தியா, போலிச்சாமியாரை பகைத்துக் கொண்டதால் ஊர்மக்கள் சந்தியா, கண்ணம்மா, பார்வதி மூவரையும் தீச்சட்டி ஏந்தி ஊரை வலம் வர வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதை ஏற்று மூவரும் அந்த பரிகாரத்தை செய்யும் போது, போலிச்சாமியார் தீவிரவாதி செல்வம் உடன் சேர்ந்து பார்வதி மற்றும் கண்ணம்மா இருவரையும் கடத்தி வருகிறார். சந்தியாவை மட்டும் தலையில் அடித்து மயக்கமடையச் செய்கிறார்.

இதன்பிறகு சந்தியா இவர்கள் மூவரையும் தேடி கண்டுபிடிப்பதை பரபரப்பாக காட்டப் போகின்றனர். மேலும் ஏற்கனவே தீவிரவாதி செல்வம் கோயிலில் குண்டு வைக்க போட்ட பிளானை பார்வதி கெடுத்து விட்டதால், அந்த கோபத்தில் பார்வதியை தீயிட்டு எரித்து கொல்ல வேண்டுமென கொடூரமாக செல்வம் திட்டமிட்டு செயல்படுகிறார்.

இதன் பிறகு ராட்சசன் போன்ற சைக்கோ படத்தை விட மோசமாக யோசித்து சீரியலின் இயக்குனர் சிவகாமி வீட்டிற்கு ஒரு பெட்டியில், பார்வதி அணிந்திருந்த மோதிரம், எரிந்த நிலையில் இருக்கும் முடி போன்றவற்றை வைத்த பார்சலை, அனுப்பி வைத்து பயம் காட்டுகிறார்.

இதைப் பார்த்ததும் குடும்பமே பரிதவித்து போகின்றனர். மேலும் அடையாளம் தெரியாத இறந்துபோன உடல் ஆற்றங்கரையில் இருப்பதாக போலீஸ் தெரிவிக்க, உடனே பதறி அடித்துக்கொண்டு அது பார்வதி தானா என குடும்பத்தினர் அந்த இடத்திற்கு செல்கின்றனர்.

அங்கு பார்வதியின் கைக்குட்டையை பார்த்த பாஸ்கர், அது பார்வதிதான் என நம்பி கதறி அழுகிறார். ஆனால் அது பார்வதியாக இருக்க வாய்ப்பில்லை. செல்வத்திடம் சிக்கியிருக்கும் பார்வதி மற்றும் கண்ணம்மா இருவரையும் சந்தியா தனது போலீஸ் மூளையை பயன்படுத்தி கண்டுபிடித்து விடுவார்.

இதைப்போன்று ராஜா ராணி 2 சீரியலில் எத்தனையோ தடவை ஏற்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் சந்தியா தான் போலீசாக செயல்பட்டு, குற்றவாளிகளை கையும் களவுமாக பிடிப்பது தான் இப்போதும் நடக்கப்போகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்