சிடுமூஞ்சி பாலாவை சிரிக்க வைக்கும் பிச்சைக்காரர்.. சந்தோஷமாக இருக்கும் அந்த ஒருநாள் ரகசியம்

தமிழ் சினிமாவில் நடிக்க தெரியாத இளம் நடிகர்களை அடித்து நடிக்க வைப்பார் என்பதால் பாலாவை அனைவருமே சிடுமூஞ்சி மனிதர் என்று கூப்பிட்டு பழகிவிட்டனர். அவரும் பெரும்பாலும் படப்பிடிப்பு தளங்களில் அப்படியே நடந்து கொள்வார்.

ஒரு சில இயக்குனர்களால் சில நடிகர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களாக மாறி விடுவார்கள். அப்படி பாலா பட்டறையில் இருந்து வந்தவர்கள்தான் விக்ரம் மற்றும் சூர்யா.

பாலா படங்களில் நடித்த பிறகுதான் இவர்களுக்கு மிகப் பெரிய மார்க்கெட்டில் உருவாகி தனி ரசிகர் கூட்டம் வந்தது. அதன் பிறகு அவர்கள் பாலா படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தற்போது வரை அவர்தான் குருநாதர் என வழிபட்டு வருகின்றனர்.

இப்போதும் பாலா படத்தில் யார் நடிக்கிறார்கள் என்ற கேள்வி எல்லாம் இருக்காது. பாலா படமா, போய் பார்க்கலாம் என ரசிகர்கள் படையெடுப்பார்கள். பாலா பெரும்பாலும் சொந்த வாழ்க்கையில் கொஞ்சம் கோபக்காரர் தான் என பலரும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால் வருடத்தில் ஒருநாள் மட்டும் அவர் அளவுக்கு அதிகமான சந்தோஷத்தை அடைவாராம். அதற்கு காரணம் அவரது நீண்டகால நண்பரான ஒரு பிச்சைக்காரர் தானாம். பாலாவுக்கு எப்போதுமே வருடத்திற்கு ஒருமுறை ராமேஸ்வரம் செல்லும் பழக்கம் உண்டு.

அங்கு அவருக்கு பாலா உதவி இயக்குனராக இருந்தபோதிலிருந்தே ஒரு பிச்சைக்காரர் நண்பராக இருந்துள்ளார். அவரை பார்ப்பதற்காகவே வருடத்திற்கு ஒருமுறை ராமேஸ்வரம் சென்று அவரை சரிசமமாக தன்னுடன் அமர்த்தி அவருடன் சகஜமாக மனம்விட்டு பேசி சிரித்துக்கொண்டு சந்தோசமாக இருப்பாராம். இந்த தகவலை வலைப்பேச்சு நண்பர்கள் தெரிவித்தனர். இந்த செய்தி வெளிவந்ததும் தற்போது அனைத்து மீடியா யூடியூப் சேனல்களும் ராமேஸ்வரத்திற்கு வண்டியை கட்டிவிட்டனர்.

bala-cinemapettai-01
bala-cinemapettai-01
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்