அமிர்தாவிடம் காதலை வெளிப்படுத்திய எழில்.. பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த ட்விஸ்ட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்கள் பல நாள் எதிர் பார்த்து வந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. சரியான சந்தர்ப்பத்தில் எழில் தன் காதலை அமிர்தாவிடம் கூறுகிறார்.

கோபியின் மகனான எழில் திருமணமாகி கணவனை இழந்த அமிர்தாவை ஒருதலையாக காதலித்து வருகிறார். எழில் தன் காதலை அமிர்தாவிடம் சொல்ல முயற்சிக்கும் போது அமிர்தா தனக்கு ஒரு குழந்தை இருப்பதை தெரியப்படுத்துகிறார். இதனால் அதிர்ந்த எழில் அமிர்தாவை குழந்தையுடன் ஏற்றுக் கொள்ள முடிவெடுக்கிறார்.

அமிர்தாவின் குழந்தையை பார்க்க வீட்டுக்கு வருகிறார் எழில். அப்பொழுது அமிர்தா தன் குழந்தை சட்டை பட்டனை முடிந்து விட்டதாக கூறி அழுகிறாள். இதனால் பதறிப்போன எழில் குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறார்.

அங்கு டாக்டர் குழந்தையின் தொண்டையில் இருந்த பட்டனை எடுத்து குழந்தையை காப்பாற்றுகிறார். இதனால் மகிழ்ச்சியடைந்த அமிர்தா, எழில் கையை பிடித்துக் கொண்டு நன்றி கூறுகிறார்.

இதுதான் தன் காதலை சொல்ல சரியான சந்தர்ப்பம் என்று நினைத்த எழில், அமிர்தாவிடம் நான் வாழ்நாள் முழுக்க உங்களுடன் இருப்பேன் என்று தன் காதலை கூறுகிறார். இதைக் கேட்ட அமிர்தா அதிர்ந்து நிற்பதுபோல் ப்ரோமோ முடிகிறது.

இதே சீரியலில் கோபி தன் மனைவிக்கு தெரியாமல் இன்னொரு பெண்ணுடன் பழகி வருகிறார். ஆனால் கோபியின் மகன் வாழ்வை இழந்த ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை தர முன்வருகிறார். இந்தப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் வரும் வாரம் பாக்கியலட்சுமி சீரியலின் முழு எபிசோடையும் காண ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்