விவாகரத்துக்கு முற்றுபுள்ளி வைத்த ராதிகா.. அடுத்த சம்பவத்திற்கு தயாராகும் பாக்கியா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த சில வாரங்களாக இந்த சீரியல் பல எதிர்பாராத சம்பவங்களுடன், பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

அதில் கோபி தன் முன்னாள் காதலி ராதிகாவுடன் திருமணம் வரை சென்ற விஷயம் அவருடைய அப்பாவுக்கு தெரிந்த பெரிய பிரச்சனை ஆகிறது. இந்த விஷயத்தை வீட்டினருக்கு தெரியப்படுத்த வரும் கோபியின் அப்பா எதிர்பாராதவிதமாக மாடியிலிருந்து விழுந்து பக்கவாதத்துக்கு உள்ளாகிறார்.

இதனால் பாக்யா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சிக்கு ஆளாகின்றனர். இந்த சம்பவத்தால் கோபி ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும் மற்றொருபுறம் எப்படியாவது ராதிகாவுடன் சேர வேண்டும் என்று முன்னை விட அதிக உறுதியாக இருக்கிறார்.

இந்நிலையில் ராதிகாவை பார்க்க கோபி அவரின் வீட்டுக்கு செல்கிறார் அப்போது ராதிகா தனக்கு விவாகரத்து கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியான செய்தியை கோபியிடம் தெரிவிக்கிறார். அத்துடன் இனி என் கணவர் என்னிடம் எந்த பிரச்சனையும் செய்யமாட்டார் என்று கூறுகிறார்.

மேலும் ராதிகா, கோபியின் மேல் சாய்ந்து அணைத்தபடி நீங்கள் சீக்கிரம் எங்களோடு வந்து சேர்ந்துவிட்டால் எனக்கு இன்னும் சந்தோசமாக இருக்கும் என்று சொல்கிறார். கோபியும், ராதிகாவை கட்டிப்பிடித்துக்கொண்டு நான் நிச்சயம் உங்களிடம் வர தான் போகிறேன் என்று சொல்கிறார்.

தற்போது இந்த ப்ரோமோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அப்பாவை படுத்த படுக்கையாக ஆக்கிவிட்டு கோபி இப்படி ராதிகாவுடன் நெருக்கமாக இருப்பது பாக்கியலட்சுமி சீரியல் பார்க்கும் ரசிகர்களை எரிச்சல்படுத்தி வருகிறது.

தன் அப்பாவால் எந்த பிரச்சனையும் இனி வராது என்ற தைரியத்தில் கோபி தைரியமாக ராதிகாவை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். இனி வரும் வாரங்களில் அவர் பாக்கியாவை விட்டு விலகுவதற்கான அனைத்து வேலைகளையும் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு எழில் என்ன மாதிரியான பதிலடி கொடுக்கப் போகிறார் என்று ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்