சிவாஜி ரேஞ்சுக்கு குழந்தையிடம் நடித்த கோபி.. விரைவில் ஆப்பு வைக்கப் போகும் எழில்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இல்லத்தரசிகளின் விருப்பமாக இருக்கும் ஒரே சீரியல் பாக்கியலட்சுமி. தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் கோபி, பாக்யா மற்றும் ராதிகா இருவரிடமும் பொய்யாக நடித்து வருகிறார்.

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக பாக்யாவின் குடும்பத்தினர் அனைவரும் கடந்த வாரம் சொந்த கிராமத்திற்கு சென்றனர். கோபி, ராதிகாவிடம் இதைப் பற்றி கூறாமல் மைசூருக்கு செல்வதாக கூறி விட்டு செல்கிறார். ஆனால் கோபியின் மகள் இனியாவுடன் வீடியோ காலில் பேசும் மையூவுக்கு கோபி கிராமத்தில் இருப்பது தெரிய வருகிறது.

உடனே மயூ தன் அம்மா ராதிகாவிடம் அதை கூறுகிறார். இதனால் கோபி தன் வீட்டிற்கு வரும்போது ராதிகா அவரிடம் இது பற்றி கேட்கிறார். இந்த கேள்வியை எப்படி சமாளிப்பது என்ற முழிக்கும் கோபி தான் மைசூரில் இருந்ததாக மீண்டும் பொய் சொல்லுகிறார்.

ஆனாலும் விடாத ராதிகாவின் மகள் அந்த வீடியோ காலில் நான் உங்களை மாதிரியே ஒரு அங்கிளை பார்த்தேன் என்று கூறுகிறார். மேலும் நான் அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இருப்பேன் ஆனால் என்னால் முடியவில்லை என்றும் சொல்கிறார்.

இதனால் அதிர்ச்சி ஆகும் கோபி அது எப்படி நான் அங்க போக முடியும் நான் தான் மைசூரில் இருந்தேனே என்று சிவாஜி ரேஞ்சுக்கு நடிக்கிறார். மேலும் உனக்கு என் மேல் ரொம்ப பாசம் அதனால்தான் யாரைப் பார்த்தாலும் உனக்கு என்னை மாதிரியே தெரிகிறது என்று குழந்தைக்கு ஐஸ் வைக்கிறார்.

இதனால் குழந்தையும் ஒருவாறு சமாதானம் அடைந்து சிரிக்கிறது. இருப்பினும் கோபி எத்தனை நாளைக்கு இந்த உண்மையை மறைக்க முடியும் என்று நொந்தபடி இருக்கிறார். குழந்தைக்கு இருக்கும் இந்த தெளிவு கூட ராதிகாவுக்கு இல்லை. கொஞ்சமும் கோபியின் மீது சந்தேகப் படாமல் அவர் சொல்வதையெல்லாம் சிரித்தபடியே கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அதனால்தான் கோபியால் ராதிகாவையும், பாக்யாவையும் எளிதாக ஏமாற்ற முடிகிறது. கோபியின் தகிடுதத்தங்கள் நிறைந்த இந்த காட்சிகள் தான் பாக்கியலட்சுமி சீரியலில் ஒளிபரப்பாக இருக்கிறது. கோபியின் மகனும், அப்பாவும் சேர்ந்து அவருக்கு விரைவில் ஒரு முடிவு காட்டுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்