திருமண அறிவிப்புக்குப் பின் நிறுத்தப்பட்ட கல்யாணம்.. பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு நேர்ந்த பரிதாபம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் டாப் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் மூத்த மருமகளாக நடித்துக் கொண்டிருக்கும் ஜெனி, சொந்தமாக தொழில் செய்து முன்னேற துடிக்கும் தன்னுடைய மாமியாருக்கு உறுதுணையாக நிற்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த சீரியலில் கிறிஸ்துவ பெண்ணான ஜெனி இந்துப் பையன் பாக்கியலட்சுமியின் மூத்த மகன் செழியனை காதலித்து பல போராட்டத்திற்கு பின்பு திருமணம் செய்து கொண்டார். ஜெனி கேரக்டரில் நடிக்கும் திவ்யா கணேஷ் நடிப்பை பார்த்து, இல்லத்தரசிகள் பலரும் இது போன்ற மருமகள் இருந்தால் எப்படி இருக்கும் என்று கனவு கண்டு கொண்டிருக்கின்றர்.

இந்நிலையில் திவ்யாவிற்கும் நடிகரும் தயாரிப்பாளருமான RK சுரேஷ் உடன் காதல் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக பத்திரிகையாளர்கள் முன்பு பேட்டி அளித்தனர்.

அதன்பிறகு ஒரு சில நாட்களில் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு திருமணத்தை நிறுத்தி விட்டனர். அதன்பிறகு பெரும் மன உளைச்சலில் இருந்த திவ்யா சீரியல்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

ஆனால் தற்போது RK சுரேஷ் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. திவ்யா கணேஷ் முதல் முதலாக சன் டிவியில் கண்மணி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார்.

பின்பு தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். இவர் தமிழிலும் விரைவில் நடிக்கப்போவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்