பாக்கியாவிற்கு அடுத்தடுத்து வரும் பிரச்சனை.. அம்மாவை பார்த்து உறைந்து போன எழில்

விஜய் டிவியில் ப்ரைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர் பாக்கியலட்சுமி. குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக பார்க்கும் இத்தொடர் யதார்த்தமான கதை களத்துடன் உள்ளது. இன்றைய எபிசோடில் கோபி ராதிகா வீட்டிற்கு செல்கிறார்.

கோபி மேல் கோபத்தில் இருக்கும் ராதிகாவை ஒருவழியாக சமாதானப்படுத்துகிறார் கோபி. ராதிகாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்ல கோபி முற்படும்போது ராதிகாவின் அம்மா அங்கு வருகிறார். ராதிகாவை கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னதுனால தான் உங்கள வீட்டுக்கு உள்ளே அனுமதித்தேன்.

எப்போ ராதிகாவை கல்யாணம் பண்ணிக்க போறீங்க என கோபி இடம் ராதிகா அம்மா கேட்கிறார். கண்டிப்பாக ராதிகாவை சீக்கிரமாக கல்யாணம் செய்து கொள்வேன் என கோபி சொல்கிறார். மறுபக்கம் பாக்கியலட்சுமி புதிதாக ஆரம்பித்த தொழிலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் மசாலா பொருள் தயாரிப்பதற்காக புதிதாக ஒரு வீடு பார்த்துள்ளார்.

அங்கே வந்த போலீஸ் இங்கே ஹோட்டல் எதுவும் நடத்தக்கூடாது. ஏரியா சுத்தி நிறைய வீடுங்க இருக்கு முதல்ல இங்கிருந்து காலி பண்னுங்க என சொல்லுகிறார். என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்த பாக்கியம், நாங்க இங்கே ஹோட்டல் நடத்தல, மசாலா பொருள் தான் தயாரிக்கிறோம்.

இங்கே இருக்கும் பெண்கள் எல்லோரும் முன்னேறனும் நினைக்கிறவங்க, இவங்க வாழ்க்கையில் பல பிரச்சனை இருக்கு என்று வேலை செய்யும் பெண்களின் நிலைமையை பற்றி எடுத்து சொல்கிறார் பாக்கியா. அதை கேட்டு போலீசார் மனம் இறங்கி இவ்வளவு சொல்கிறார்கள், உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது என சொல்ல, பாக்கியா ஒரு மாதம் வேலை செய்கிறோம் பிரச்சனை வந்தால் நாங்க காலி செய்துவிடுகிறோம் என சொல்கிறார். அதைக்கேட்டு போலீஸ் சம்மதித்து அங்கிருந்து செல்கின்றனர். இதை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த எழில், தனியாளாக இருந்து எல்லாத்தையும் சமாளிச்சுட்ட என்று பாக்கியவை பாராட்டுகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்