நீ இல்லைனா நா செத்துருவேன்.. கள்ளக்காதலை நேரில் பார்த்த நொறுங்கிப் போன பாக்யா

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் சின்னத்திரை ரசிகர்கள் இவ்வளவு நாள் எதிர்பார்த்த அந்த பரபரப்பான நிகழ்வு இன்று ஒளிபரப்பாகிறது. அதாவது கோபிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்பதை ஏற்கனவே தெரிந்துகொண்ட பாக்யாவிற்கு, அது ராதிகா தான் என்ற விஷயம் எப்போது தெரியும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இந்த சம்பவம் தற்போது நடந்திருக்கிறது. ராதிகா கோபியை அடியோடு வெறுத்து ஒதுக்குவதால், அதனால் மனம் நொந்துபோன கோபி ஏடாகூடமாக காரை ஓட்டி லாரியின் விட்டுவிட்டான். இதனால் விபத்தில் சிக்கிய கோபியை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதன்பிறகு மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் ராதிகா மற்றும் பாக்யா இருவருக்கும் தொலைபேசி மூலம் அழைத்து, மருத்துவமனை வர வைக்கின்றனர். பாக்யாவிற்கு முன்பே ராதிகா வந்ததால் கோபியின் மனைவி ராதிகா என நினைத்து செவிலியர்கள் ராதிகாவிடம் கையெழுத்து வாங்குவதை பாக்யா பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.

பிறகு அடிபட்ட கோபி இருக்கும் அறைக்குள் உள்ளே சென்று பார்த்தால், கோபி ராதிகாவின் கையை பிடித்து ‘என்னை விட்டுப் போய் விடாதே ராதிகா, நீ இல்லை என்றால் நான் செத்து விடுவேன்’ என உருகிப் பேசியதன் மூலம் கோபியின் கள்ளக்காதலி ராதிகா தான் என தெரிந்ததும் பாக்யா நொறுங்கிப் போய் விட்டாள்.

அதன்பிறகு பாக்யா, ராதிகாக்கு கோபியை விட்டு கொடுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் ‘கொஞ்சம் கூட உன்னை பிடிக்கவில்லை’ என கோபி பாக்யாவை அடிக்கடி சொன்னது அவள் நினைவுக்கு வரும். அதுமட்டுமின்றி ராதிகாவும் பாக்யாவை கோயிலில் கடைசியாக வைத்து பார்க்கும் போது ‘இனிமேல் உங்களுடைய வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வராது’ என சொன்னதற்கு இதான் அர்த்தமா என்றும் பாக்யா யோசிப்பார்.

இருப்பினும் இதை கோபியின் அம்மா மற்றும் கோபியின் மகள் இனியா, இதை எப்படி தாங்கிக் கொள்வார்கள் என பாக்யா கலக்கம் கொள்கிறாள். எனவே சற்றும் எதிர்பாராத பரபரப்பான சம்பவம் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்து நிகழ்வதால் இந்த வாரத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் அடி தூள் கிளப்பப் போகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்