பொறுமையை இழந்து எரிமலையாக வெடித்த பாக்யா.. அங்கிள் இதுக்கு தூக்குல தொங்கிடலாம்!

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் கள்ளக்காதலை தெரிந்ததும் பாக்யா எரிமலையாக வெடிக்கிறார். இவ்வளவு நாள் பாசத்தை பகடைக்காயாக பயன்படுத்தி கோபி தன்னை முட்டாளாக்கியதை தாங்கிக் கொள்ள முடியாமல், குடும்பத்தினர் முன்னிலையில் நாக்கைத் பிடுங்கிக் கொள்வது போல் கோபியை பேசுகிறார்.

ஏனென்றால் கோபி பாக்யாவிற்கு தெரியாமலேயே விவாகரத்து வாங்குவதற்கு நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றதும், ராதிகா வீட்டிற்கு வந்தபோது, கோபி நெஞ்சுவலி நாடகம் போட்டதற்கான காரணம் இப்போதுதான் பாக்யாவிற்கு புலப்படுகிறது. மேலும் பெண்களைப் பார்த்தாலே கூச்சமாக இருக்கிறது, வெட்கமாக இருக்கிறது என பாக்யாவிடம் நடித்த கோபி, கள்ளக்காதலியுடன் குடும்பத்தை பாதியிலேயே விட்டுவிட்டு குன்னக்குடியிலிருந்து வந்த கதையெல்லாம் பாக்யா அம்பலப்படுத்துகிறார்.

ஒரு மனிதன் குடும்பத்தினரிடம் இவ்வளவு பொய், இவ்வளவு நாடகமா ஆடுவது! என கோபியை முகத்திற்கு நேராக பாக்யா வெளுத்து வாங்குகிறார். இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாமல் கூனிக்குறுகி நிற்கும் கோபி, குடும்பத்தினரை பார்க்கமுடியாமல் அசிங்கப்பட்டு தலைகுனியும் நிலை ஏற்பட்டது.

இதன்பிறகு பாக்யா, ‘உங்களுக்கு பிடித்த வாழ்க்கையை சந்தோசமாக வாழுங்கள். ஆனால் முட்டாளாக நீங்கள் நடத்தும் நாடகத்தை பார்த்து ஏமாறுவதற்கு நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன்’ என வீட்டைவிட்டு வெளியேறுகிறார். அவரைத் தடுத்து நிறுத்த குடும்பமே அவர் பின்னால் செல்கிறது.

இருப்பினும் சமாதானம் ஆகாத பாக்யா இனிமேல் கோபியுடன் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது என்ற முடிவில் ஆணித்தரமாக இருக்கிறார். மறுபுறம் ராதிகா, கோபியை மன்னித்து ஏற்றுக்கொள்ள தயாராகுவதால் குடும்பத்தை பற்றி கவலைப்படாமல் கோபி இனிவரும் நாட்களில் ராதிகாவின் வீட்டில் தங்கும் முடிவை எடுக்கப் போகிறார்.

இவ்வாறு பரபரப்பான உணர்ச்சி மிகுந்த தருணங்கள் பாக்கியலட்சுமி சீரியலில் அரங்கேறுவதால், பொறுமையை இழந்து எரிமலையாக வெடிக்கும் பாக்யா பேசும் பேச்சை பார்க்கவே முடியவில்லையே, இதைக் கேட்பதற்கு பதில் தூக்குல தொங்கலாம் என கோபியை சின்னத்திரை ரசிகர்கள் வறுத்தெடுக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்