கள்ளக் காதலுக்காக குடும்பத்தை கழட்டி விட நினைக்கும் கோபி.. இது என்னடா பாக்யாவுக்கு வந்த சோதனை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் அமோக ஆதரவை பெற்று டிஆர்பி யில் முன்னணியில் உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது அந்த சீரியலில் வரும் கோபி கேரக்டர் மட்டுமே.

பார்ப்பதற்கு அப்பாவி போன்று இருக்கும் கோபி தன் குடும்பத்துக்குத் தெரியாமல் தனியாக ஒரு காதலை மெயின்டெயின் செய்து வருகிறார். அதாவது அவரின் பழைய காதலி ராதிகாவுடன் மீண்டும் தன் காதலை புதுப்பித்துள்ளார்.

இத்தனைக்கும் கோபிக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள், மருமகள் என்று அனைவரும் இருக்கிறார்கள். ஆனால் தனக்கு தன் காதல் தான் முக்கியம் என்று கோபி, ராதிகாவுடன் நெருக்கமாக பழகி வருகிறார். இதை பார்த்த கோபியின் அப்பா கோபியை அழைத்து எச்சரிக்கிறார்.

ஆனாலும் அடங்காத கோபி தற்போது ராதிகாவை திருமணம் செய்யும் அளவிற்கு வந்துவிட்டார். கோபி, ராதிகாவுடன் பழகுவதை கண்டித்த ராதிகாவின் அம்மாவிடம் நான் ராதிகாவை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்கிறேன் என்றும், என் குடும்பத்தில் அதிக பிரச்சனை இருப்பதால் நான் குடும்பத்தை விட்டு வெளியேறப் போகிறேன் என்றும் கூறினார்.

இதை நம்பி ராதிகாவின் அம்மாவும் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். இப்பொழுது எப்படி தன் குடும்பத்தை கழட்டி விடுவது என்று கோபி தீவிர சிந்தனையில் இருப்பது போன்ற காட்சிகள் காட்டப் பட்டு வருகின்றன. இவ்வாறு நகரும் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது பலரும் கலாய்த்து வருகின்றனர்.

காதலுக்காக அப்பா, அம்மாவை விட்டு விட்டு வரேன்னு சொல்றவங்கள தான் கேள்விப் பட்டிருப்போம். ஆனா பொண்டாட்டி, பிள்ளை, மருமகளை விட்டுட்டு வரேன்னு சொன்ன ஒரே ஆளு நம்ம தலைவர் கோபி தான் என்றும், இது என்னடா நம்ம சிங்கப்பெண் பாக்யாவுக்கு வந்த சோதனை என்றும் சோஷியல் மீடியாவில் பலரும் இந்த சீரியலை கலாய்த்து வருகின்றனர்.

gopi-bhagkiyalaxmi
gopi-bhagkiyalaxmi
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்