ஒரே நாளில் வெறுப்பை சம்பாதித்த ரம்யா கிருஷ்ணன்.. ஆண்டவரை கொண்டு வாங்க பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனுக்கு பதில் ரம்யா கிருஷ்ணன் நேற்று தொகுத்து வழங்கினார். படையப்பாவில் நீலாம்பரியாக மிரட்டிய ரம்யா கிருஷ்ணனை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பஞ்சதந்திரம் மேகி யாக மாறிய ரம்யா கிருஷ்ணன் பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார்.

பிக்பாஸ் ரசிகர்கள் ஆண்டவரே சீக்கிரம் ஆண்டவரை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்புங்கள் என்று கதறும் அளவிற்கு நேற்றைய நிகழ்ச்சி இருந்தது. ரம்யா கிருஷ்ணன் போட்டியாளர்களிடம் நன்றாக பேசினாலும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆதரவாக பேசியது தான் ரசிகர்களின் ஏமாற்றத்திற்கு காரணம்.

மேலும் இது ஒரு தமிழ் நிகழ்ச்சி என்பதால் கமல்ஹாசன் தன்னுடைய வழக்கமான தமிழ் மொழியில் போட்டியாளர்களிடம் உரையாடுவார். ஆனால் ரம்யா கிருஷ்ணன் அதிகமாக ஆங்கிலத்தில் மட்டுமே பேசினார் இதுவும் நிகழ்ச்சிக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் நேற்றைய குறும்படம் ஒரு தேவையில்லாத ஆணியாக இருந்தது. அதற்கு ரம்யா கிருஷ்ணன் அளித்த தீர்ப்பும் மொக்கையாக இருந்தது. இதுவே ஆண்டவராக இருந்திருந்தால் வீட்டில் ஓவரா நடந்து கொண்ட அக்ஷராவுக்கு ஒரு குட்டு வைத்திருப்பார்.

இதன் காரணமாக ரசிகர்கள் நிகழ்ச்சியைப் பற்றிய தங்களது கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் நேற்று முதல் ரம்யா கிருஷ்ணன் தான் டிரெண்டிங்கில் உள்ளார். இதைப் பார்க்கும்போது கமல்ஹாசன் என்ற ஒற்றை மனிதன் தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உயிர்நாடி என்று தெரிகிறது.

இதை எதிர்பார்த்து தான் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே நடிகை ரம்யா கிருஷ்ணன், கமல்ஹாசனிடம் நான் உங்கள் சிஷ்யை உங்கள் அளவுக்கு நிகழ்ச்சியை நடத்த முயற்சிக்கிறேன் என்று சொல்லித் தப்பித்துக் கொண்டார். ஆனாலும் ரசிகர்கள் ரம்யா கிருஷ்ணன் வேண்டாம் கமல்ஹாசன் தான் வேண்டும் என்று கூறுகின்றனர்.

மேலும் இரண்டு வாரங்களுக்கு ரம்யா கிருஷ்ணன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. உங்கள் கருத்துக்களை பார்த்த பிறகாவது ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய ஸ்டைலை மாற்றுவாரா என்று பார்க்கலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்