ஆடம்பரத்தின் உச்சத்திற்கு சென்ற அட்லி.. தயாரிப்பாளர் பணத்தில் ராஜ வாழ்க்கை

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் அட்லி. இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றன. அதுவும் விஜய் உடன் கூட்டணி அமைத்து வெளியான தெறி மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தன.

அட்லி தற்போது ஷாருக்கான் வைத்து எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். மிக பிரமாண்டமாக உருவாகி வரும் இத்திரைப்படம் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நடத்தாமல் வைத்துள்ளனர். ஆனால் இப்படத்தை இயக்கி வந்த அட்லி தற்போது வரை மும்பையில் வசித்து வருகிறார்.

அட்லி தங்குவதற்காக ஷாருக்கான் மும்பையில் உள்ள பிரபல தாஜ் ஹோட்டலில் தங்க வைத்துள்ளார். கிட்டத்தட்ட 3 வருடமாக அட்லி தனது குடும்பத்துடன் ஹோட்டலில் வசித்து வருகிறார். இதற்காக ஷாருக்கான் பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்வதால் மும்பையிலிருந்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

அட்லி முதலில் தனக்கு ஒரு உதவியாளர் வைத்துள்ளார். தற்போது அந்த உதவியாளருக்கு இன்னொரு உதவியாளரை வைத்துள்ளாராம். அதாவது முதலில் இருக்கும் உதவியாளரை பார்த்துவிட்டு அவர் சம்பாதித்த பிறகு அடுத்து இருக்கும் உதவியாளரிடம் கூறுவாராம். அதன் பிறகுதான் அட்லிக்கு இந்த விஷயம் போகுமாம். அந்த அளவிற்கு தனக்கு 2 உதவியாளர்கள் வைத்துள்ளார்.

மேலும் அவருடைய உதவி இயக்குனர்கள் கூட அவரை பார்க்க முடியவில்லையாம். அந்த அளவிற்கு அட்லி மும்பையிலேயே பிசியாக இருக்கிறாராம். ஷாருக்கான் செலவில் அட்லி பயங்கரமாக செலவு செய்து வருவதாக கூறி வருகின்றனர்.

ஆனால் முதலில் அட்லியை ஷாருக்கான் பார்க்க மாட்டேன் என மறுத்துள்ளார். பின்பு அட்லி ஷாருக்கான்னிடம் கதையை கூறியுள்ளார். ஷாருக்கானுக்கு அட்லி கூறிய கதை பிடித்துப்போனதால் தான் படத்தில் நடிப்பதற்கு சம்மதித்துள்ளார். ஆனால் தற்போது அட்லியை ஷாருக்கான் வசதியாக வைத்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்