சத்தமில்லாமல் அட்லி செய்யும் வேலை.. புடிச்சதெல்லாம் புளியங் கொம்பா இருக்கே!

தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் அட்லி. இவர் ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக சில படங்களையும் தயாரித்துள்ளார். தமிழில் இவர் இதுவரை நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

அதில் தெறி, மெர்சல், பிகில் போன்ற திரைப்படங்கள் நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து அட்லி தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படம் தற்போது மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி வருகிறது. இதையடுத்து அட்லி மீண்டும் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து ஒரு படம் இயக்க இருக்கிறார். அதற்கான கதைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த கதையில் நடிக்க நடிகர் விஜய்யும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அட்லி தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படம் இயக்குவதற்கு ரெடி ஆகி உள்ளார். அதற்கான வேலைகளும் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் அட்லியின் இயக்கத்தில் அடுத்தடுத்து மூன்று படங்கள் விரைவில் தயாராக இருக்கிறது.

இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தையும் அவர் சத்தமில்லாமல் செய்து வருகிறார். விஜய் மற்றும் அல்லு அர்ஜுன் இருவரும் தற்போது வேறு படங்களில் பிசியாக இருப்பதால் அவர் ஷாருக்கானை வைத்து படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக அவர்கள் படத்தில் இணைய இருக்கிறார்.

பிகில் திரைப்படத்திற்கு பிறகு சிறிது காலம் படங்கள் இயக்காமல் இருந்த அட்லி தற்போது படு வேகமாக அடுத்தடுத்து கதைகளை தயார் செய்துள்ளார். அவர் அடுத்தடுத்து மூன்று மொழிகளில் படங்களை இயக்கும் இந்த தகவலை விரைவில் தன் ரசிகர்களுக்கு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்