ஷாருக்கான் மேனேஜரை பொத்தி பொத்தி பார்த்துக் கொள்ளும் அட்லி.. படப்பிடிப்பில் நடந்த சுவாரசியம்!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இதனைத் தொடர்ந்து, முன்னணி நடிகரான விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார்.

தற்போது முதன்முறையாக ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதன் மூலம் ஹிந்தியிலும் இயக்குனராக தன் முத்திரையை பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இதுவரை இப்படம் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், இப்படத்தின் டெஸ்ட் ஷூட் மும்பையில் இன்று தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

pooja dadlani
pooja dadlani

மேலும், இதை உறுதிப்படுத்தும் வகையில் ஷாரூக்கானின் மேனேஜர் பூஜா தத்லானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ‘படப்பிடிப்பு தளத்தில் எனக்கு கூடுதல் பாதுகாப்பு கொண்ட முகக்கவசம் கொடுத்த அட்லிக்கு நன்றி, இது என்னை வித்தியாசமாகவும் உணர வைக்கிறது’ என்று கூறியுள்ளார்.

அட்லியின் முதல் படமான ’ராஜா ராணி’ தொடங்கி ’பிகில்’ வரை அனைத்தும் காப்பி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தின் கதை எந்த ஹாலிவுட் படத்தின் காப்பி என்று ரசிகர்கள் இணையத்தில் சர்ச்சையை கிளப்பி வருகிறார்கள். இதுவரை தனது படங்கள் குறித்த சர்ச்சைகளுக்கு பெரிதும் செவி சாய்க்காத அட்லி அடுத்தடுத்து படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

அடுத்தடுத்த படங்களில் உச்சத்திற்கு செல்லும் கோலிவுட் இயக்குனர் அட்லி, பாலிவுட்டில் பட்டையைக் கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் அட்லிக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்