50 வயது நடிகருடன் நடிக்க மாட்டேன் என பட வாய்ப்பை தூக்கி எறிந்த அதுல்யா.. ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது!

காதல் கண் கட்டுதே படம் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. ஆனால் இவர் இதற்கு முன்பாகவே டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றின் மூலம் மிகவும் பிரபலமானவராக அறியப்பட்டார். அதன் மூலமே இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

இதைத் தொடர்ந்து ஏமாலி, அடுத்தசாட்டை, நாடோடிகள் 2, சுட்டு பிடிக்க உத்தரவு, மற்றும் கேப்மாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். ஆனால் இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை இருப்பினும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இவரது படங்கள் தோல்வி அடைவதற்கு அதுல்யாவும் ஒரு முக்கியக் காரணம் என கூறுகிறார்கள். ஆம் அதுல்யாவின் தவறான அனுகுமுறையும் படங்களின் தோல்விக்கு ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. அதுல்யா படங்களை தேர்வு செய்வதில் ரொம்பவும் தவறான அனுகுமுறையை மேற்கொண்டு வருகிறாராம்.

இந்நிலையில் இவரை தேடி வந்த பட வாய்ப்பை அவரே ஓவர் சீன் போட்டு கெடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளரான நட்ராஜ் சமீப காலமாக படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான சதுரங்க வேட்டை மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது நட்டி கதாநாயகனாக நடிக்க உள்ள புதிய படத்துக்கு அதுல்யாவை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளனர். ஆனால் நட்டிக்கு எல்லாம் ஜோடியாக நான் நடிக்க முடியாது எனக் கூறி அனுப்பியுள்ளாராம். இந்நிலையில் இப்போது அந்த வாய்ப்பு காளி பட கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத்துக்கு சென்றுள்ளதாம்.

athulya ravi
athulya ravi

அதுல்யா தற்போது தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக மட்டும் தான் உள்ளார். இன்னும் முன்னணி நடிகைகள் பட்டியலில் இணையவில்லை. அதற்கு முன்னரே இவ்வளவு சீன் போடுவது சரியில்லை என கூறி வருகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்