நாளுக்கு நாள் படு கேவலமாக நடந்து கொள்ளும் அர்ச்சனா.. மாட்டிக்கொண்டு முழிக்கும் சிவகாமி

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் வில்லியாக நடித்துக்கொண்டிருக்கும் அர்ச்சனா, நாளுக்கு நாள் படுகேவலமான செயல்களில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார். ஏனென்றால் சந்தியாவின் பெட்ரூமிற்கு வந்து அவளுடைய அலமாரியைத் திறந்து நோட்டமிடுவதும், சந்தியா நகையை அணிந்து கொண்டு திருடி விடலாமா? என திட்டம் போடுவது போன்ற கேவலமான செயலில் அர்ச்சனா ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி தன்னுடைய அம்மா அப்பா போட்டோவை சந்தியா தன்னுடைய பெட்ரூமில் வைத்திருப்பதை அர்ச்சனா பார்த்துவிட்டு, அதை மாமியார் சிவகாமியிடம் போட்டுக் கொடுக்க கிளம்புகிறார்.

மேலும் சிவகாமியின் மகள் பார்வதிக்கு நிச்சயமான பாஸ்கரை தன்னுடைய தங்கை பிரியாவிற்கு திருமணம் செய்து வைக்க, பார்வதி மற்றும் பாஸ்கர் கல்யாணத்தை நிறுத்த, அர்ச்சனா சதித் திட்டம் தீட்டி கொண்டிருக்கிறாள்.

இவ்வாறு வீட்டில் இருக்கும் உறவினர்களை எப்படி எல்லாம் பழி வாங்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் வீட்டுக்குள்ளே சுற்றித்திரியும் அர்ச்சனா, சிவகாமியின் குடும்பத்தினரை ஒவ்வொரு நாளும் ஏதாவது செய்து படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறாள்.

இருப்பினும் சந்தியாவிற்கு இந்த விஷயமெல்லாம் தெரிந்தாலும் கர்ப்பமாக இருக்கும் அர்ச்சனாவை அவ்வப்போது மன்னித்து, இவள் இப்படித்தான் என்ற முடிவிற்கு சந்தியா வந்துவிட்டாள்.

என்ன செய்தாலும் அர்ச்சனாவை மன்னித்துக் கொண்டிருக்கும் சந்தியா, அர்ச்சனாவை எப்படியாவது நல்லவளாக்க வேண்டுமென முயற்சிக்கிறார். இருப்பினும் அர்ச்சனை செய்யும் அட்டூழியத்தை பார்த்துக்கொண்டிருக்கும் ராஜா ராணி2 சீரியல் ரசிகர்களுக்கு அர்ச்சனாவின் மீது நாளுக்கு நாள் வெறுப்பு அதிகமாகிறது..

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்