Tamil Cinema News | சினிமா செய்திகள்
அடுத்த படம் பண்ணலாமா என கேட்ட முருகதாஸ்.. ஏன் இதுவரைக்கும் பண்ணது போதாதா என கடுப்பில் லைகா
ஒரு சில இயக்குனர்கள் முன்னணி நடிகர்களை வைத்து மட்டுமே படம் இயக்குவேன் என அடம்பிடித்து வருகின்றனர். அதில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் ஏ ஆர் முருகதாஸ். குறைந்த படங்களை இயக்கியிருந்தாலும் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
கிட்டத்தட்ட ஒரு படத்திற்கு 25 முதல் 30 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். ஆனால் அதற்கேற்ற சரக்கு ஏ ஆர் முருகதாஸ் இடம் உள்ளதா என கேட்டால் அதற்கு தர்பார் தான் சாட்சி. தர்பார் படம் நஷ்டம் என ஏற்கனவே ரஜினியின் வீட்டின் முன்பு விநியோகஸ்தர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
இதனால் ஏற்கனவே லைக்கா நிறுவனம் கடுப்பில் உள்ளது. இந்நிலையில் தர்பார் படத்திற்கு முன்பாகவே தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனனை வைத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்க அட்வான்ஸ் முதற்கொண்டு கொடுத்து புக் பண்ணியது லைக்கா.
தர்பார் படத்தின் தலைகீழான ரிசல்டால் தற்போது ஏ ஆர் முருகதாஸை வைத்து படம் பண்ணலாமா என யோசித்துக் கொண்டிருக்கிரதாம் லைக்கா நிறுவனம். இருந்தாலும் கமிட் செய்து விட்டதால் வழியின்றி விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்க ஏ ஆர் முருகதாசுக்கு உத்தரவிட்டு இருக்கிறதாம்.
மேலும் தர்பார் படம் அளவுக்கு சம்பளம் கொடுக்க முடியாது என தெளிவாக கூறி விட்டதாக தெரிகிறது. தற்போது தான் யார் என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஏ ஆர் முருகதாஸ் இருப்பதால் வேறு வழியின்றி சொல்வதையெல்லாம் கேட்டுத்தான் ஆகவேண்டும் என களத்தில் இறங்கியுள்ளார்.
