2000 பேருக்கு பதில் சொல்லணும்.. பாக்யாவை அசிங்கப்படுத்திய ராதிகாவிற்கு நடக்கப் போகும் கதி

விஜய் டிவியின் பிரைன் டைம்ஸ் சீரியல் ஆன பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது சக்காளத்தி சண்டை முற்றி கோபியின் தலை உருளுகிறது. 50 வயதில் தன்னுடைய சந்தோசம் தான் முக்கியம் என, 25 வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்ட கோபி ராதிகாவை 2-வது திருமணம் செய்து கொண்டார். அது மட்டுமல்ல பாக்யாவையும் தன்னுடைய வீட்டில் இருக்கக் கூடாது என்று விரட்டி அடிக்க பார்த்தார்.

ஆனால் ராமமூர்த்தி தன்னுடைய முழு சொத்துக்களையும் எழுதிக் கொடுத்தும், 20 லட்சம் கொடுக்கும்படி பாக்யாவிடம் கோபி ஸ்டிட்டாக சொல்லிவிட்டார். இதனால் கேட்ரிங் தொழிலில் காசு பார்க்க வேண்டும் என கேண்டீன் ஆர்டரை கையில் எடுத்திருக்கிறார். ஆனால் இந்த ஆர்டர் பாக்யாவிற்கு கிடைக்கக்கூடாது என்று, அதே நிறுவனத்தில் வேலை பார்த்த ராதிகா ஏகப்பட்ட சதி வேலைகளை செய்தார்.

Also Read: 24 வருட உறவை தூக்கி எறிந்த சன் டிவி.. ராதிகாவை தொக்கா தூக்கி பிரபல சேனல்

இறுதியில் தர்மம் தான் வெல்லும் என்பதற்கு ஏற்ப, பாக்யா மிகக் குறைந்த பணத்தை டென்டரில் கோட் செய்ததால் அவருக்கே அந்த ஆர்டரை கொடுத்து விட்டனர். இதன் பிறகு அந்த கம்பெனி மேனேஜர் ராதிகாவை பாக்யாவிடம் ஏதாவது கேள்வி கேட்க வேண்டுமென்றால் கேளுங்கள் என்று சொல்லிவிட்டார். அந்த சமயம் பார்த்து ராதிகாவும் பாக்யாவிற்கு இங்கிலீஷ் தெரியாது என்பது தெரிந்தும், ஆங்கிலத்திலேயே சரமாரியாக கேள்வி கேட்கிறார்.

இது புரிந்தும் அதற்கு பதில் சொல்ல முடியாமல் பாக்யா திணறுகிறார். மிகக் குறைந்த பட்ஜெட்டில் இந்த கேண்டீன் ஆர்டரை எடுத்திருப்பது எப்படி சாத்தியம்? சுமார் 2000 பேருக்கு ஒரு நாளில் மட்டும் சமைத்துக் கொடுக்க வேண்டும் பெரிய பெரிய ஃபங்ஷன் எல்லாம் இங்கு நடக்கும் எப்படி சமாளிப்பீர்கள்? என்றெல்லாம் ராதிகா கேட்கிறார்.

Also Read: ஊத்தி மூடப் போகும் குக் வித் கோமாளி சீசன் 4.. அதிரடியாக வெளியேறிய பிரபலம்

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பாக்யா தமிழில் உரையாட ஆரம்பித்தார். சமைப்பதற்கு ஆங்கிலம் அவசியம் இல்லை. ஒருவேளை தேவை ஏற்பட்டால் அதையும் கற்றுக் கொள்கிறேன் என்று பாக்யா ராதிகாவின் மூக்கை உடைக்கிறார். ஒருவேளை ஆங்கிலத்தில் மெயில் செய்ய வேண்டுமே அதற்கெல்லாம் என்ன செய்யப் போகிறீர்? என்றும் பாக்யாவிடம் ராதிகா கேட்டு அசிங்கப்படுத்துகிறார். விரைவில் ஆங்கிலத்தில் கற்றுக் கொள்கிறேன் என்று ராதிகாவிடம் பாக்யா சவால் செய்கிறார்.

எவ்வளவோ பிரச்சனையை எல்லாம் சமாளித்த பாக்யாவிற்கு ஆங்கிலம் படிப்பதெல்லாம் கால் தூசி. விரைவில் அதையும் கற்றுக்கொண்டு ராதிகாவை சரமாரியாக ஆங்கிலத்தில் பேசி வெளுத்து வாங்க போகிறார். இதை பார்க்க சின்னத்திரை ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். முன்பு ஒரே தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருந்த பாக்யா, ராதிகா இப்போது ஒரே இடத்தில் வேலை செய்து, ஒவ்வொரு நாளும் சக்காளத்தி சண்டை போட போகின்றனர். இதனால் இனிவரும் நாட்களில் பாக்கியலட்சுமி சீரியல் இன்னும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: உடல் மெலிந்து கிக்கான புகைப்படம் வெளியிட்ட பிக் பாஸ் ஷிவானி.. கிறங்கி போன இளசுகள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்