சினிமா ஆசையில் சன் டிவியிலிருந்து விஜய் டிவிக்கு வந்த சீரியல் நடிகர்.. தலையில் துண்டைப் போட்ட சன் நிறுவனம்!

சமீபகாலமாக மற்ற சேனல்களில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே விஜய் டிவியை குறி வைப்பதற்கான காரணம் என்னவென்றால் சிவகார்த்திகேயன் மற்றும் சந்தானம் போன்ற ஹீரோக்கள் வந்தது தான் இருக்கிறார்கள் கோலிவுட் வட்டாரங்கள்.

சிவகார்த்திகேயனுக்கு பிறகு டிவி நடிகர்கள் சினிமாவுக்கு செல்வதில் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் இருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவியிலிருந்து தற்போது சினிமாவில் நாயகனாக அடிஎடுத்து வைத்திருப்பவர் ரியோ ராஜ்.

இவரும் ஒரு காலத்தில் சன் டிவியில் பணியாற்றியவர் தான். தற்போது அதே போல பல வருடங்களுக்கு முன்பு சன் டிவியில் தென்றல் என்ற சீரியலில் நடித்த தீபக் என்பவர் தற்போது விஜய் டிவியில் ஒரு சீரியலில் நடிக்க உள்ளாராம்.

மேலும் அவருக்கு ஜோடியாக தென்றல் சீரியலில் நடித்த ஸ்ருதிராஜ் தான் நடிக்க உள்ளார். விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாம். தீபக் சமீபகாலமாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

deepak-cinemapettai
deepak-cinemapettai

அதுமட்டுமில்லாமல் இவனுக்கு தண்ணில கண்டம் என்ற படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். விஜய் டிவிக்கு வந்தால் தன்னுடைய ஹீரோ இமேஜ் இன்னும் உயரும் எனவும், சினிமாவில் மீண்டும் ஒரு வலம் வர உதவியாக இருக்கும் எனவும் விஜய் டிவியை தேர்ந்தெடுத்துள்ளார்.

என்னதான் விஜய் டிவியை கிண்டல் செய்தாலும் அதிலிருந்து திறமைசாலிகள் நிறைய பேர் சினிமாவில் சாதித்து வருகின்றனர் என்பதற்கு உதாரணமாய் பலரை சொல்லலாம். அந்த வகையில் தீபக் கனவு நிறைவேறுமா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்