அந்நியன் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை யார் தெரியுமா.? அட இவங்க உலக பேமஸ் ஆச்சே!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்திற்கு பெயர் பெற்ற இயக்குனர் என்றால் அது சங்கர் மட்டும்தான். அவர் அளவிற்கு பிரம்மாண்டமாக படத்தை யாராலும் எடுக்க முடியாது. அந்த அளவிற்கு அவரது படங்கள் அனைத்தும் பிரம்மாண்டமாக இருக்கும்.

அந்தவகையில் கடந்த 2005ஆம் ஆண்டு சங்கர் மற்றும் விக்ரம் கூட்டணியில் உருவான பிரம்மாண்ட படம் தான் அந்நியன். இப்படம் விமர்சனங்கள் ரீதியாகவும், வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவின் வசூல் ரீதியாக ஒரு புதிய சாதனை படைத்தது என்றும் கூட சொல்லலாம். அந்த அளவிற்கு இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் விக்ரமின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது அப்பாவி அம்பி, காதல் ரெமோ, அந்நியன் என மூன்று பரிமாணங்களில் நடித்து மிரட்டியிருப்பார். இவருடன் சாதா, விவேக், பிரகாஷ்ராஜ், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அந்நியன் படத்தில் முதலில் நடிக்கவிருந்த கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் நடிகை சதா நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதன்முதலில் நடக்கவிருந்தது பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தான் என்று தெரியவந்துள்ளது.

அந்நியன் படத்தின் போது ஐஸ்வர்யா ராய் கால்சீட் கிடைக்காத காரணத்தால் இப்படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இப்படத்தையடுத்து ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

aishwarya-rai
aishwarya-rai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்