Tamil Cinema News | சினிமா செய்திகள்
பக்கத்தில் இருந்தும் விக்னேஷ் சிவனை பார்க்க முடியாமல் தவிக்கும் நயன்தாரா.. அடக்கி வைத்த அண்ணாத்த
கொரோனாவிற்கு பின் அனைத்து படப்பிடிப்புகளும் தற்போது தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட அண்ணாத்த படபிடிப்பு தற்போது தொடங்கி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா கலந்து கொள்ளும் காட்சிகள் ஹைதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட ஸ்டூடியோவான ராமோஜி பிலிம் சிட்டியில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக பார்க்கப்படுவதால் கொரோனா பாதுகாப்பின் அடிப்படையில் சர்வதேச படப்பிடிப்புகளில் பயன்படுத்தப்படும் பயோ பபுள் என்ற தொழில்நுட்பத்தை கையாண்டு வருகின்றனர்.
இதனால் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து முடியும் வரை யாருமே வெளியே வர முடியாது. 40 நாட்கள் படப்பிடிப்பு முடியும் வரை யாரும் வெளியே செல்லக் கூடாது என்பது தான் அண்ணாத்த ரஜினிகாந்தின் கட்டளை.
மற்றொருபுறம் விக்னேஷ் சிவன் காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தின் படப்பிடிப்பு அதே ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. சமந்தா நடிக்க உள்ள காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது, அவர் போட்ட கண்டிஷன் படி அவருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு விக்னேஷ் சிவன் தற்போது எடுத்து வருகின்றனர்.
என்னதான் ஒரே இடத்தில் இருந்தாலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை பிரித்து வைத்துள்ளது கொரோனா. இத்தனை நாட்கள் ஜோடி போட்டு சுற்றி விட்டு தற்போது பிரிந்திருப்பது விக்னேஷ் சிவனுக்கு ஏக்கமாக தான் உள்ளதாம், சிங்கிள்ஸ் வயிற்றெரிச்சல் சும்மா விடுமா பாஸ் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

nayanthara-vignesh-shivan
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
