இந்த ஒரு விஷயத்திற்கு சம்பளம் வாங்காத அனிருத்.. அடேங்கப்பா! இத்தனை பாடல்களா.?

கோலிவுட்ல இளம் இசையமைப்பாளர் என்றால் அது அனிருத் தான். பல படங்கள்ல மிகவும் பிசியா இசையமைச்சிட்டு இருக்குற அனிருத் இப்போ நெல்சன் மற்றும் விஜய் கூட்டணில உருவாகி இருக்குற பீஸ்ட் படத்துக்கு இசையமைச்சிருக்காரு. இதுதவிர இப்போ அஜித், வினோத் கூட்டணியில உருவாக உள்ள புது படத்துக்கும் இசையமைக்க உள்ளதாக சொல்றாங்க.

இதுதவிர சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் டான் படத்தில் இவர் கம்போஸ் செய்துள்ள ஜலபுல ஜங் பாடல் தான் தற்போது டிரண்டிங்கில் உள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி அனிருத் அவர் இசையமைக்கும் படங்கள் தவிர மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடல்கள் பாடி வருகிறார். அந்த வகையில் மற்ற இசையமைப்பாளர் இசையில் அனிருத் இதுவரை சுமார் 175 பாடல்கள் வரை பாடியுள்ளாராம். ஆனால் அவர் இதற்கு சம்பளம் வாங்கவில்லை என கூறப்படுகிறது.

அனிருத் சினிமாவில் நுழைந்த தற்போது வரை பல ஹிட் பாடல்களை வழங்கியுள்ளார். அவர் நினைத்தால் ஒரு பாட்டுக்கு குறைந்தது 5 லட்சம் ரூபாய் வரைக்கும் சம்பளமாக கேட்கலாம். ஆனால் மனுஷன் இப்போது வரை ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லையாம். அந்த அளவிற்கு அனிக்கு தங்கமான மனசாம்.

அதெல்லாம் சரி தான் இந்த பாட்டுக்கெல்லாம் சம்பளம் வாங்கி இருந்தா இப்போ வாடகை குடுக்காம ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இருந்திருக்காதே அனி என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள். சமீபத்தில் ஸ்டுடியோவிற்கு வாடகை கொடுக்காமல் அனிருத் மும்பைக்கு தப்பி சென்றதாக கூறப்பட்டது.

என்னதான் அனிருத் சம்பளம் வாங்காமல் பாடியதை பலரும் பாராட்டினாலும் சிலர் இப்படி சம்பளம் வாங்காமல் பாடினால் எப்படி வாடகை கொடுக்க முடியும் என்று விமர்சித்து வருகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்