எக்ஸ் புருஷன் கோபியால் சிலையாக மாறிய பாக்யா.. கோர்ட் வாசலில் நடந்த மட்டமான பஞ்சாயத்து

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் கல்லூரி காதலி ராதிகாவுடன் தொடர்பில் இருந்த கோபிக்கு அவருடைய மனைவி பாக்யாவே விவாகரத்து கொடுத்து விட்டார். கல்யாணம் ஆகுற வயதில் இருக்கும் பிள்ளைகளை வைத்துக்கொண்டு, பேரப்பிள்ளை எடுக்கிற வயதில் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த கோபிக்கு பாக்கியாவாக முன்வந்து விவாகரத்து தந்ததை பெரிய அவமானமாக கோபி நினைக்கிறார்.

இதனால் கோர்ட்டு வாசலில் விவாகரத்து வாங்கிக் கொண்ட கோபி, பாக்யாவை கண்டபடி திட்டுகிறார். ‘வெளி உலகத்தை தெரிந்து கொள்ளாத மரமண்டையுடன் 25 வருடமாக குடும்பம் நடத்தி இருக்கேன். இருவருக்கும் 10 சதவீதம் கூட ஒற்றுமை இல்லாத போதும் இத்தனை வருடமாக சேர்ந்து வாழ்ந்திருக்கிறேன்.

இவ்வளவு நாட்களாக என்னுடன் பிடிக்காமல் குடும்ப நடத்தியதால் தானே, விவாகரத்து என்றதும் துள்ளிக் குதித்துக் கொண்டு கோர்ட்டு வாசலில் வந்திருக்கிறாய்’ என தன்னை ஒரு தியாகி ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டு கோபி பாக்யாயுடன் கோர்ட் வாசலில் மட்டமாக பஞ்சாயத்து நடத்துகிறார்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு தாங்கமுடியாத எழில், அப்பாவை அடக்க நினைத்தாலும் பாக்யா அதை தடுக்கிறார். ஏனென்றால் இருவருக்கும் விவாகரத்து பெற்ற பிறகு, கொஞ்சம் கூட உரிமை இல்லாத கோபியிடம் எதற்கு பதில் கொடுத்து பேசவேண்டும் என கோபியை எக்ஸ் புருஷன் ஆக நினைத்து பாக்யா ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

இருப்பினும் நம்பிக்கை துரோகம் மிகப்பெரிய வலியை ஏற்படுத்தும் என்பதால் அந்த சமயம் பாக்யா உணர்ச்சிகளற்ற சிலை போல் ஆனார். அதன் பிறகு விவாகரத்து பெற்று விட்டோம் என்ற சந்தோசத்தில் மனமகிழ்ச்சியுடன் ராதிகா வீட்டிற்கு சென்று அவரிடம் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி கோபி பேசுகிறார்.

கோபியை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவருடைய அம்மா மற்றும் அண்ணன் இருவரும் ராதிகாவை வற்புறுத்துகின்றனர். மறுபுறம் பாக்யா வீட்டில் யார் இருக்கப்போகிறார்கள், கோபி வெளியே போகிறாரா? அல்லது பாக்யா வெளியேறி விடுவாரா? என குடும்பமே பரிதவித்து நிற்கிறது.

இன்னிலையில் ராதிகா நடந்து கொள்வதைப் பார்த்தால் அவர் கோபியை மன்னிப்பு ஏற்றுக் கொண்டு, இனி பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவிற்கு வில்லியாக மாறப் போகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்