அந்தரங்க விஷயத்திற்கு சரிப்பட்டு வராத கணவர்.. போதை மருந்து பிடியில் சிக்கிய நடிகை

முன்னணி ஹீரோயின் ஆக கை நிறைய சம்பாதித்து வருபவர் தான் அந்த நடிகை. ஆனாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கு இருக்கும் பிரச்சனை பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கிறது. பல வருடங்களாக காதலித்த அந்த நடிகரையே ஊர் மெச்சும் வகையில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்ட நடிகை இப்போது தீவிர மன அழுத்தத்தில் இருக்கிறாராம்.

கல்யாணத்திற்கு பிறகும் பிசியாக நடித்து வரும் நடிகை இப்போதெல்லாம் கணவரிடம் முகம் கொடுத்து கூட பேசுவது கிடையாதாம். இதனாலேயே இந்த ஜோடி விவாகரத்துக்கு தயாராகி விட்டது என பல செய்திகள் பூதாகரமாக வெடித்து வருகிறது. நடிகையும் அதற்கு ஏற்றார் போல் சதா நேரமும் போதை மருந்தின் மயக்கத்திலேயே இருக்கிறாராம்.

ஏனென்றால் நடிகையின் கணவர் அந்தரங்க விஷயத்திற்கு சரிப்பட்டு வராத நிலையில் இருக்கிறாராம். அதாவது நடிகை முன்னணி இடத்தில் இருந்தாலும் குழந்தை, குட்டி என வாழ்வதற்கு ரொம்பவும் ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் அவருடைய கணவருக்கு இந்த விஷயத்தில் கொஞ்சம் உடல் சம்பந்த பிரச்சனை இருக்கிறதாம்.

இருந்தாலும் காதலுக்காக பொறுத்து பொறுத்துப் போன நடிகை இப்போது பொங்கி எழுந்துள்ளார். ஏனென்றால் நடிகர் சமீப காலமாக மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வருகிறாராம். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பதற்கு ஏற்ப மொத்த பழியையும் நடிகையின் மேலேயே திருப்பி விடுகிறாராம்.

இதை ஏற்க முடியாத நிலையில் தான் நடிகை இப்போது போதைக்கு அடிமையாகி விட்டாராம். சில நாட்களுக்கு முன்பு கூட அந்த மருந்தின் வீரியத்தால் மயங்கி கிடந்த நடிகை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இப்படி தன் உடல் நலத்தை கெடுத்துக் கொள்ளும் இந்த நடிகையின் போக்கை பற்றி அவருக்கு நெருக்கமானவர்கள் அனைவரும் வருத்தத்தோடு புலம்பி கொண்டிருக்கின்றனர்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →