அர்த்த ராத்திரியில் நடிகையை தேடி வரும் நடிகர்.. எல்லை மீறிய அந்தரங்க உறவால் பதறிய அம்மா

இளம் நடிகை ஒருவர் தன்னுடைய முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பின்னால் சுற்ற வைத்தார். இப்போது அடுத்தடுத்த வாய்ப்புகளை கைப்பற்றி இருக்கும் நடிகை பிசியாக அனைத்து மொழிகளிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இது ஒரு புறம் இருந்தாலும் நடிகையின் காதல் விஷயம்தான் இப்போது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. பள்ளி மாணவியாக நடித்த இந்த நடிகையின் அழகில் மயங்கிய அந்த ஹீரோ இப்போது சதா நேரமும் அவர் வீட்டிலேயே பொழுதை கழிக்கிறாராம். அந்த அளவுக்கு இவர்கள் இருவருக்குள்ளும் காதல் தீ கொழுந்து விட்டு எரிகிறது.

அது மட்டுமல்லாமல் அர்த்த ராத்திரியில் நடிகையை பார்ப்பதற்காக அந்த ஹீரோ ரகசியமாக அவர் வீட்டுக்கு வந்து போகிறாராம். பல நேரங்களில் இருவரும் தனி ரூமில் மணி கணக்கில் நேரத்தை செலவிடுகிறார்களாம். இதை பார்த்து நடிகையின் அம்மா ரொம்பவே பதறிப் போய் இருக்கிறார். ஏனென்றால் காதல் என்ற உறவையும் தாண்டி அவர்களுக்குள் எல்லை மீறிய அந்தரங்க உறவும் இருந்திருக்கிறது.

இதைப்பற்றி கேட்டபோது நடிகை நாங்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று அம்மாவின் வாயை அடைத்திருக்கிறார். அதற்கு அந்த தாய்க்குலம் திருமணத்திற்கு பிறகு எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் சம்பந்தப்பட்ட ஜோடி இது எதையும் காதல் வாங்கிக் கொள்ளாமல் தங்கள் வேலையை தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள். இத்தனைக்கும் நடிகரின் வீட்டுக்கு இந்த விஷயம் இன்னும் தெரியவில்லை. இப்படி ரகசியமாக உறவை மெயின்டெயின் பண்ணி வரும் இவர்கள் திருமணத்தில் இணைவார்களா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →