சினிமா மட்டும் சரியா வரலைனா ரோட்டுல பாட்டு பாடிட்டு திரிஞ்சிருப்பேன்.. பிரபல நடிகர் கண்ணீர்

என்னதான் பணம் காசு வைத்திருக்கும் வாரிசு நடிகர்கள் பலர் சினிமாவில் பிசியாக நுழைந்தாலும் கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு தனி மரியாதை இருக்கத்தான் செய்கிறது. எந்தவொரு பின்புலமும் இல்லாமல் வெற்றி பெறுபவர்களை ரசிகர்கள் கொண்டாட தவறியதில்லை.

தற்போது இந்தி சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஆயுஷ்மான் குரானா. இவரும் சிவகார்த்திகேயனை போல் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கலக்கி கொண்டிருக்கும் நடிகர்தான்.

கடந்த சில வருடங்களில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களாக சொல்லப்படும் அமீர்கான், சல்மான்கான், ஷாருக்கான் போன்றோரின் படங்களைவிட ஆயுஷ்மான் குரானா நடித்த படங்களே பெரிய அளவு வெற்றியை பெற்றுள்ளது.

வசூலிலும் தாறுமாறு வெற்றிதான். இதனால் ஆயுஷ்மான் குரானா மீது முன்னணி நடிகர்கள் பலரும் பொறாமையில் இருப்பதாக ஒரு செய்தி பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக வருகிறது. சமீபத்தில் ஆயுஷ்மான் குரானா சொன்ன செய்திதான் ரசிகர்களை கலங்கடித்துள்ளது.

இன்று சினிமாவில் முக்கிய நடிகராக இருக்கும் ஆயுஷ்மான் குரானா ஆரம்ப காலகட்டங்களில் சினிமா தனக்கு சரியாக வரவில்லை என்றால் பார்ட்டிகள் மற்றும் கோயில் விழாக்களில் பாட்டு பாடி நடனமாடி சம்பாதித்திருப்பேன் என தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதிலிருந்தே சினிமாவில் எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தார் என்பது தெரிகிறது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் உங்களுடைய நல்ல மனதுக்கு இன்னும் பெரிய உயரத்தை தொடுவீர்கள் என அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

ayushmann khurrana-cinemapettai
ayushmann khurrana-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்