சரக்கு தீர்ந்ததால் முடிந்ததை வைத்து சண்டை போட்ட அமீர்.. திரும்பத் திரும்ப பேசுற நீ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 5 நிகழ்ச்சி அடுத்த வாரத்துடன் முடிவுக்கு வர இருக்கிறது. இதனால் பிக்பாஸ் டைட்டிலை யார் வெல்வார்கள் என்று பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வாரத்திற்கான நாமினேஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அது ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் எப்படியாவது இதில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் மற்றவர்களை டாமினேட் செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் போட்டியாளர்களுக்கு முட்டை டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் பவானி, ராஜு, தாமரை, பிரியங்கா உட்பட அனைவரும் தங்களுக்குள் கடுமையாக மோதிக்கொண்டனர். அதில் பிரியங்கா, தாமரை இருவருக்கும் நடந்த கைகலப்பு பெரிய விவாதமாக மாறியது.

அந்த பிரச்சனையை ஒருவழியாக கமல் தீர்த்து வைத்தாலும், இன்னும் அதை மனதில் வைத்துக் கொண்டு நாமினேஷன் போது பேசி வருகின்றனர். நேற்றைய நிகழ்ச்சியில் தாமரை மற்றும் அமீர் இருவருக்கும் கடந்த வாரம் நடந்த முட்டை டாஸ்க் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் அவர்களின் வாக்குவாதம் அதிகமாகி நா என்ன வேணும்னாலும் பண்ணுவேன், எனக்கு உரிமை இருக்கு, நீ பேசாத என்று ஆவேசமாக சண்டையிட்டுக் கொண்டனர். இதனால் நேற்று நிகழ்ச்சியை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரும் இன்னுமா உங்களுக்கு முட்டை டாஸ்க் முடியல என்று அவர்கள் இருவரையும் கண்டபடி திட்டி வருகின்றனர்.

மேலும் இந்த வாரம், இறுதி வாரம் என்பதால் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பண பெட்டி கொடுக்கப்படும். கடந்த சீசன்களில் கவின், கேபிரில்லா ஆகியோர் பண பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்கள். அதேபோன்று இந்த முறை பண பெட்டியை யார் எடுத்துச் செல்வார்கள் என்பதை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நாமினேட் பண்ணுவதற்கு வேற கன்டென்ட் இல்லாததால் அமீர் மற்றும் இல்லாமல் அனைத்து போட்டியாளர்களும் முட்டை டாஸ்க்கை வைத்து இந்த வாரம் ஓட்டி விடலாம் என்று முடிவு செய்து விட்டனர். இதனால் வாரம் தொடக்கத்திலேயே ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்