புஷ்பா படத்தில் அந்த மாதிரி யோசித்த கிளைமாக்ஸ்.. அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட இயக்குனர்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக பகத் பாசில் நடித்திருந்தார்.

இப்படம் ஆந்திர வனப்பகுதியில் நடைபெறும் செம்மரக் கடத்தலை மைய்யப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் புஷ்பராஜ் என்ற கதாபாத்திரத்தில் லாரி டிரைவராகவும், செம்மரம் கடத்துபவராகவும் நடித்திருந்தார்.

புஷ்பா படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு இப்படத்தின் முதல் பாகமான புஷ்பா தி ரைஸ் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் கடந்த டிசம்பர் 17-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சமந்தா நடனம் ஆடிய ஓ சொல்றியா மாமா பாடல் சர்ச்சைக்குள்ளானது.

இதனால் இப்படத்திற்கு பல சிக்கல்கள் வரும் என எதிர்பார்த்த நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக லாபத்தை ஈட்டியது. இந்நிலையில் புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இயக்குனர் சுகுமார் அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளார்.

புஷ்பா படத்தின் கிளைமாக்ஸில் அல்லு அர்ஜுன், பகத் பாசில் இருவரும் சண்டையிடுவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருவரும் நிர்வாணமாக சண்டையிடுவது போல் திட்டமிட்டு இருந்தார்களாம். ஆனால் அதை ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என கருதி இருவரும் டவுசர் அணிந்தபடி சண்டையிடுவது போல் அக்காட்சி மாற்றியமைக்கப்பட்டதாக சுகுமார் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா மாமா பாடல் ஆண்களை காம எண்ணம் கொண்டவர்களாக மட்டுமே சித்தரித்து மிகவும் இழிவாக எழுதப்பட்டுள்ளதாக எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் நிர்வாண காட்சிகள் இடம் பெற்றிருந்தால் பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி புஷ்பா படம் படுதோல்வியை சந்தித்து இருக்கும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்