நிறைவேறாமல் போன அஜித்தின் ஆசை.. வருத்தத்துடன் சொன்ன இயக்குனரின் மனைவி

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அஜித்தின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது. இதனால் அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

அவ்வாறு மலையாள படம் ஒன்றை பார்த்த அஜித் வியந்து உள்ளார். அதுமட்டுமல்லாமல் உடனே அந்த இயக்குனருக்கு போன் போட்டு நாம் ஒரு படத்தை பண்ணலாம் என கூறியுள்ளார். அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற படம்தான் அது.

இப்படத்தை சச்சிதானந்தம் எழுதி, இயக்கியிருந்தார். திரைத்துறையில் இவர் சச்சி என்றுதான் அறியப்படுகிறார். அய்யப்பனும் கோஷியும் படத்தில் பிரித்விராஜ், பிஜூ மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு வரவேற்பைப் பெற்றது.

இந்தப்படம் கேரளாவை தாண்டி தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி ரசிகர்கள் மத்தியிலும் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின்பு தெலுங்கில் பவன் கல்யாண் மற்றும் ராணாவை வைத்து இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதில் இப்படத்திற்கு நான்கு பிரிவுகளில் விருது கிடைத்தது.

அதாவது சிறந்த இயக்குனர், துணை நடிகர், பாடகி, சண்டை இயக்குனர் ஆகியவற்றிற்காக தேசிய விருது கிடைத்துள்ளது. ஆனால் இயக்குனர் சச்சி 2020 ஆம் ஆண்டு தனது 48வது வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மனைவி ஒரு வார இதழுக்கு பேட்டி கொடுத்திருந்தார்.

அப்போது அஜித் அய்யப்பனும் கோஷ்யும் படத்தை பார்த்துவிட்டு சச்சியிடம் போனில் பேசி உள்ளார். இந்த படம் எனக்கு ரொம்ப பிடித்துள்ளது, உங்களுடன் ஒரு படம் பண்ண வேண்டும் என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இதைப்பற்றி பேச கொச்சி வரட்டுமா என அஜித் கேட்டுள்ளார்.

ஆனால் அப்போது சிகிச்சை பெற்றுவந்த சச்சி, ஆபரேஷன் முடிந்த பிறகு நானே சென்னையில் வந்து பார்க்கிறேன் என அஜித்திடம் சொல்லி உள்ளார். அதற்குள்ளாகவே சச்சி மறைந்ததால் இந்த சந்திப்பு நடக்காமலேயே போய்விட்டது. அதன் பிறகுதான் அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்