Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரு சின்ன போஸ்டர் கூட ஓட்ட கூடாதாம்.! இதில் அஜித் படம் மட்டும் எப்படி?

தமிழ் நாட்டில் நடக்கும் பல பிரச்சனைகளில் சினிமா பிரச்சனையும் ஓன்று ஆம் கடந்த மார்ச் 1 ல் இருந்து எந்த புது படமும் ரிலீஸ் ஆகவில்லை, கியூப் மற்றும் தியேட்டர்கள் அட்ராசிட்டி ஒழுங்கு படுத்துதல் திட்டத்தில் ஒரு ஸ்டெப் இல்லாமல் பல ஸ்டெப் முன்னேறி நிற்று அடித்து வருகிறது தயாரிப்பாளர் சங்கம். இதற்க்கு முன் விஷாலுக்கு எதிராக நிற்று கேம் ஆடிய பல தயாரிப்பாளர்கள் இப்பொழுது விஷாலுக்கு சப்போர்ட் செய்வதால் நினைத்ததை நடத்தி காட்டுவேன் என்ற நிலையில் புல் ஸ்பீட் காட்டி வருகிறார்.
மேலும் அடுத்த கட்ட நடவடிக்கையாக மார்ச் 16 முதல் படபிடிப்பு ரத்து போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நிறுத்தம், பிரஸ் மீட்டுகள் இல்லை, பத்திரிகை நாளிதழ் விளம்பரம் இல்லை, அவ்வளவு ஏன் ஊர் எங்கும் ஒட்டப்படும் சினிமா போஸ்டர்களும் தடை போஸ்டர் ஓட்டுவோர் சங்கத்தை அழைத்து தயாரிப்பாளர் சங்கம் இந்த பிரச்சனை முடியும் வரை எந்த சினிமா போஸ்டரும் ஓட்டகூடாது என திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
இந்த பிரச்சனை இவ்வளவு சீரியஸாக இருக்க ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விசுவாசம் படத்திற்கு செட் போடும் வேலைகள் மட்டும் நிறுத்தப்படவில்லை ஏன் தெரியுமா? முதல் முறையாக ஆரம்பிச்சிருக்கோம் சென்தடிமென்ட்டா நிறுத்த வேண்டாம் என கூறிவிட்டாராம் சத்யஜோதி தியாகராஜன், ஒருவேளை மார்ச் 23 ம தேதி அனைத்து பிரச்சனையும் முடிந்து விட்டால் அதே செட்டில் விசுவாசம் படம் ஷூட்டிங் தொடங்குவோம் இல்லையென்றால் பிரச்சனை முடியும் வரை அந்த செட் அப்படியே இருக்கட்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள்.
இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் திரையுலக பிரச்சனை முடிகிற வரைக்கும் அஜித்தின் ‘விஸ்வாசம் ’ படப்பிடிப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை.
