அஜித் படத்தில் பணியாற்றியும் அங்கீகாரம் கிடைக்கவில்லை.. மேடையில் புலம்பித் தள்ளிய பிரபலம்!

தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்த நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். ஒரு நடிகர் என்று பெருமை பாராட்டாமல், தனது ரசிகர்களிடம் அன்பாக பழகும் அஜித்தின் குணமே அனைவருக்கும் அவரை பிடிக்க காரணமாகும். தன் படத்தில் பணியாற்றும் சிறிய நடிகர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை அஜித் செய்து வருகிறார்.

தற்போது அஜித் போனிகபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் 2வது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் வலிமை. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜித்தை திரையில் பார்த்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், ரசிகர்கள் உச்சகட்ட ஆர்வத்துடன் மிகுந்த எதிர்பார்ப்பில் வலிமை படத்தை பார்க்க காத்திருக்கிறார்கள்.

வலிமை படத்திற்கு மட்டுமல்ல இதற்கு முன்பு அஜித் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் இது போன்ற எதிர்பார்ப்புதான் நிலவியிருந்தது. அப்படிப்பட்ட மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த படம் தான் என்னை அறிந்தால். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

charu nivetha
charu nivetha

இந்நிலையில் நடிகர் அஜித்தின் “என்னை அறிந்தால்” படம் குறித்து பிரபல எழுத்தாளரான சாரு ஒரு தகவலை கூறியுள்ளார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் அவர் கூறியதாவது, “என்னை அறிந்தால் படத்தில் முதல்பாதியில் கதைக்கான விவாதத்தில் நான் பணியாற்றினேன். எனினும் அதற்காக எனக்கு எந்த அங்கீகாரமும் தரப்படவில்லை” என கூறியுள்ளார்.

அஜித் படத்தில் பணியாற்றியதற்காக தனக்கு எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை என பிரபல எழுத்தாளர் சாரு கூறியுள்ளது அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்