Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்தை சினிமாவை விட்டே துரத்த சொன்னாங்க.. நான்தான் இரண்டாவது வாய்ப்பு கொடுத்தேன் என அதிர்ச்சியளித்த பிரபலம்
என்றைக்குமே சினிமாவில் ஆரம்பகட்ட நிலைகளில் அதிக அளவு சோதனைகள் இருக்கும். அதையெல்லாம் தாண்டி வந்தால் மட்டுமே சினிமாவில் சரித்திரம் படைக்க முடியும். அப்படி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் தல அஜித்.
எப்போதுமே நல்லது செய்ய நினைப்பவர்களுக்கு கொஞ்சம் நல்லதும் நிறைய கெட்டதும் நடக்கும். அப்படித்தான் தல அஜித் ஒரு சிலருக்கு சப்போர்ட் செய்ய ஒரு கூட்டமே அவரை எதிர்த்து சினிமாவை விட்டே காலி செய்ய நினைத்தது என பிரபல இயக்குனர் விக்ரமன் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எப்போதுமே பெப்சி யூனியனுக்கும் இயக்குனர் சங்கத்திற்கும் ஏதாவது பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கும். அப்படி ஒரு கட்டத்தில் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும்போது தல அஜித் இயக்குனர்களுக்கு சப்போர்ட் செய்யாமல் பெப்சி தொழிலாளர்களுக்கு சப்போர்ட் செய்துள்ளார்.
எப்போதுமே முதன்மை தொழிலாளி முதல் கடைசிகட்ட தொழிலாளர்கள் வரை பார்த்து பார்த்து அவர்களுக்கு நல்லது செய்பவர் தல அஜித் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் பெப்ஸி யூனியனுக்கு சப்போர்ட்டாக இருந்துள்ளார் தல அஜித்.
இதனால் இயக்குனர் சங்கம், தல அஜித்தை வைத்து இனிமேல் படம் இயக்க கூடாது என்றும், எந்த தயாரிப்பாளரும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது எனவும் கூட்டம் கூட்டி முடிவு எடுக்கப்பட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் விக்ரமன் கூறியுள்ளார்.
ஆனால் அஜித்துக்கு அதன்பிறகு தானே, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தின் மூலம் இரண்டாவது ஹீரோ வாய்ப்பு கொடுத்ததாக கூறியுள்ளார் விக்ரமன். அவர்களுக்குத் தெரியாது அஜித் இன்று சினிமாவுக்கே சோறு போடும் அளவுக்கு வளர்வார் என்று.
