கூட இருந்தே துரோகம் செய்த நபர்.. மன்னித்து விடுகிறேன் ஓடிப் போயிரு எனக் கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழில் முண்ணனி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். 2011ல் வெளியான “அவர்களும் இவர்களும் ” படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான ஐஸ் தொடர்ந்து ரம்மி, காக்கா முட்டை, கனா, பன்னையாரும் பத்மினியும், அட்டகத்தி, வடசென்னை உட்பட விலாசிய பந்துகள் எல்லாம் சிக்சர் முகமே.

காக்கா முட்டை படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது பெற்ற ஐஸ் சமீபத்தில் கலைமாமனி விருது வாங்கியது தமிழ் திரையுலகையே பெருமைப்படுத்திய நிகழ்வு.

கடந்த ஊரடங்கிலும் க/பெ ரணசிங்கம் படத்தின் மூலம் பெயரை காப்பாற்றிய ஐஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவரது உதவியாளர் பற்றி பேசியிருக்கிறார். அதாவது அந்த உதவியாளர் இவரிடம் சுமார் ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினார் அவரை இவர் முழுமையாக நம்பி இருந்துவந்தாராம்.

Aishwarya-Rajesh
Aishwarya-Rajesh

அந்த உதவியாளரோ பலரிடம் இவரிடம் சொல்லாமலே பலரிடம் அப்டேட்களை கொடுப்பது என்றும். இவர்களின் லாக்கர் நம்பர்களை பலரிடம் தெரியப்படுத்துவது என இருந்துள்ளாராம் அந்த உதவியாளர்.

இப்போது பணி நீக்கப்பட்ட அவர்மீது வழக்கு போட சொல்லி பல்வேறு நண்பர்களும் கூறினார்களாம். அதற்கு ஐஸோ எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என்றும் நேர்மை தவறாது நம்பகமாக செயல்படட்டும் என்றும் கூறியிருக்கிறார்.

செட்டிலும் வெளியிலும் அத்தனை ஜாலியாக இருக்கும் ஐஸுக்கும் இப்படியாக சில கசப்பு அனுபவங்களும் உண்டு.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்