பேட்டி கொடுத்த சேனலிலேயே வேலை பார்க்கும் பரிதாபம்.. குடிப்பழக்கத்தால் பாழாய் போன நடிகை

பிரபல நடிகை தான் பேட்டி கொடுத்த சேனலில் தொகுப்பாளராக வேலை புரிந்து வருவது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1992ஆம் ஆண்டு இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான ராசுகுட்டி இத்திரைப்படத்தின் மூலமாக ஐஸ்வர்யா தமிழில் அறிமுகமானார்.

அதன் பிறகு பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். மேலும் திருமணமாகி விவாகரத்து செய்த ஐஸ்வர்யா, அதற்குப்பின் சின்னத்திரையில் சில நாடகங்களில் நடித்து வந்தார். இதனிடையே சமீபத்தில் ஒரு தனியார் யூடியூப் சேனலில் பேட்டி அளித்துள்ளார்.

அப்போது, தனக்கு ஆதரவு யாருமில்லை என்றும் தன் மகளை திருமணம் செய்து வைத்ததற்கு பின்னர், தானும், தான் வளர்க்கும் நான்கு பூனைகள், மட்டுமே வீட்டில் இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் குளிக்கும் சோப்புகளை நானே தயாரித்து வீடு வீடாக சென்று விற்று சம்பாதித்து வருவதாக ஜஸ்வர்யா தெரிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை ஐஸ்வர்யா மிகவும் பாசிட்டிவாக கூறினாலும் , சின்னத்திரையிலிருந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றும், தான் ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு வருவதாக தெரிவித்தது பலரையும் உலுக்கியது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வரும் நிலையில், ஐஸ்வர்யா தான் பேட்டி கொடுத்த அதே யூடியூப் சேனலில் வேலையில் சேர்ந்துள்ளார்.

40,000 ரூபாய் மாத வருமானத்தில் தொகுப்பாளராக பணிபுரிந்து வரும் நிலையில், சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியை பேட்டி எடுத்து அசத்தினார். இதனிடையே தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்து லட்சம் லட்சமாக சம்பாதித்த ஜஸ்வர்யா தற்போது வருமானத்திற்காக சோப்புகளை விற்றும், மாத சம்பளத்தில் வேலை பார்த்தும் வருவது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் ஜஸ்வர்யா சம்பாதித்த அனைத்து பணத்தையும் மது குடித்தே அழித்துள்ளாராம். அதுமட்டுமில்லாமல் தான் குடிப்பது போதாது என்று தன் நெருக்கமான நண்பர்கள், சினிமா பிரபலங்களுக்கும் தன் சொந்த செலவில் வாங்கிக் கொடுத்து அவர் சம்பாதித்த பணத்தை அழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்