விஜய் சேதுபதிக்காக பட்டை தீட்டிய புதிய கதை.. மீண்டும் இளம் இயக்குனருடன் அதிரடி கூட்டணி

தற்போது தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மிகவும் பிசியாக வலம் வரும் ஒரே நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி மட்டுமே. பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பையன் போன்று தோற்றமளிப்பதாலோ என்னவோ படவாய்ப்புகள் இவரை தேடி குவிந்தவண்ணம் உள்ளது. ஏற்கனவே கால்ஷீட் டைரி நிரம்பி வழியும் அளவிற்கு பட வாய்ப்புகள் உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

அதுவும் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் தற்போது விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளார். ஏற்கனவே லோகேஷ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து அனைவரது பாராட்டையும் தட்டிச் சென்றார். இன்றுவரை மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் பேசப்பட்டு வருகிறது.

இதனையடுத்து மீண்டும் இரண்டாவது முறையாக லோகேஷ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக இணைந்தார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவர்கள் இருவரது காம்போ மாஸ்டர் படத்தில் பாராட்டி தட்டி சென்றதால் தற்போது விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மூன்றாவது முறையாக மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்க உள்ளார் அதுவும் ஹீரோவாக.

இயக்குனர்கள் மணிரத்னம், சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன், கெளதம் மேனன், மிஷ்கின், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் இணைந்து ‘ரெயின் ஆன் பிலிம்ஸ்’ என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். தற்போது இந்நிறுவனத்தின் முதல் படத்தை தான் லோகேஷ் இயக்கவுள்ளார். இதில் தான் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க உள்ளார்.

lokesh kanakraj tweet.

முன்னதாக இப்படத்தில் சூர்யா நாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது இதில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கவுள்ளதாக இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்