நீங்களும் என்ன கால வாரி விட்டுட்டீங்க.. விஷயம் தெரிந்து நேருக்கு நேராக ராதிகாவுடன் மோதும் பாக்கியா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது விறுவிறுப்பான கதை களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. கோபியின் சுயரூபத்தை அறிந்த பாக்கியா இனியும் என்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது என வீட்டை விட்டு வெளியேறுகிறார். மேலும் செல்வி வீட்டில் பாக்கியா தங்குகிறார்.

மறுபுறம் கோபியிடம் இனியா, செழியன், ஜெனி என ஒவ்வொருவரும் பாக்யாவை பற்றி எடுத்துச் சொல்லுகின்றனர். கோபி செழியனிடம் தனக்குள் இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். அதாவது என்னுடைய மனைவியாக வரப்போறாங்க இப்படித்தான் இருக்க வேணும் என நினைத்தேன். ஆனால் என்னை கட்டாயப்படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார்கள்.

நான் ஒரு கோழையாக அப்போது இருந்ததால் என்னால் எதையும் யோசிக்க முடியவில்லை. ஆனால் எனக்கும் தனிப்பட்ட ஆசைகள் இருந்தது. இந்த இரண்டு வருடமாக தான் என் வாழ்க்கையில் ராதிகா வந்தார். ஆனால் என் தனிப்பட்ட சந்தோஷத்தை நான் யோசித்து இருக்கக்கூடாது என கோபி பேசுகிறார்.

மறுபக்கம் ராதிகா தனது மகள் மயூவை வெளிநாடு அழைத்துச் செல்வதற்கு சமாதானப்படுத்துகிறார். ஆனால் தொடர்ந்து வீடு மாற்றி வருவதால் மயூ வருத்தமாக பேசுகிறார். இதை நினைத்து ராதிகாவும் கவலைப்படுகிறார். இந்நிலையில் பாக்கியா செல்வியுடன் ராதிகா வீட்டிற்கு செல்கிறார்.

பாக்யாவுக்கு உண்மை தெரிந்தது தற்போது வரை ராதிகாவுக்கு தெரியாததால் யதார்த்தமாக ராதிகா பேசுகிறார். கடைசியில நீங்களும் என்னை ஏமாத்திட்டீங்களா என பாக்கியா ராதிகாவிடம் கேட்கிறார். உடனே அதிர்ச்சியில் உறைகிறார் ராதிகா. இதனால் ராதிகா தன் தரப்பில் உள்ள ஞாயத்தை எடுத்துரைப்பார்.

ஒருவேளை பாக்கியா ராதிகாவை மன்னித்தாலும் செல்வி மோசமான கேள்விகளைக் கேட்பார். இதனால் ஆத்திரமடைந்த ராதிகா கோபியை திருமணம் செய்து இவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கலாம் என்ற முடிவை எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதிரடி திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி தொடர் வர இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்