டெல்லியில் தமிழக முதல்வரின் அதிரடியான பிரச்சார பேச்சு.. ஹாட்ரிக் ஆட்சியமைக்கும் அதிமுக!

தமிழகத்தில் அதிமுக கட்சியின் சார்பில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் முதல்வராக பணியாற்றி வருகிறார். மேலும் இவரது நலத் திட்டங்களால் தமிழகம் தற்போது இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக மாறியுள்ளது.

அதேபோல், தமிழகத்தில் வருகின்ற மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியும் தங்களது கட்சிக்காக மும்மரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்தவகையில் எடப்பாடி கே பழனிசாமி அவர்களும் தனது கட்சிக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு முதல்வர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்தப் பேட்டியில் எடப்பாடியார், தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிதி உதவி கோரியுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், திமுகவிற்கு சாதமாகமானவர்களால் கருத்துக் கணிப்பு வெளியிட்டபட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து வெற்றிக்கொடி நாட்டும் எனவும் முதல்வர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.

எனவே, முதல்வரின் இந்த அதிரடியான பிரச்சார பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்