முதல் படமே சூப்பர் ஹிட், பின் 4 வருடங்களாக நடிக்காதது ஏன்.? பிரபல நடிகை ஓபன் டாக்!

கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குநர் அருண் பிரபு, புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியான அருவி திரைப்படத்தை அவ்வளவு எளிதில் நம்மால் மறக்க முடியாது. அந்த சமயத்தில் இப்படம் பலரது பாராட்டையும் பெற்றது. இப்படத்தில் நாயகியாக நடித்திருந்த அதிதி பாலன் தன் நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.

இத்திரைப்படத்திற்காக, சிறந்த நடிகைக்கான விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து வேறு எந்தப் படத்திலும் அதிதி பாலன் நடிக்கவில்லை. இடையில், ஒரு ஆந்தாலஜி படத்தில் மட்டும் நடித்திருந்தார்.

இந்நிலையில், நான்கு வருடங்களாக தமிழ் சினிமாவில் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்து பேட்டி ஒன்றில் அதிதி பாலன் கூறியுள்ளார். அதில், “அருவி படத்துக்குக்குப் பிறகு நான் எடுத்துக்கொண்ட இந்த இடைவெளி நிறைய பேருக்கு மிக நீண்டதாகத் தோன்றலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை, இது சினிமாவைப் புரிந்துகொள்வதற்காக நான் தேர்ந்தெடுத்த ஒரு வழி.

கடந்த சில ஆண்டுகளாக இந்த இடைவெளியில் நன்றாகவே திரைத்துறையைப் புரிந்துகொண்டேன். சினிமாவில் நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதைக் கண்டுபிடிக்கவும், சினிமா தொடர்பான விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் இடைப்பட்ட இந்த நேரத்தை நான் பயன்படுத்திக்கொண்டேன் என கூறியுள்ளார்.

மலையாளத்தில் இவர் நடிப்பில் நேற்று வெளியான கோல்ட் கேஸ் படம் தவிர படவேட்டு என்ற மலையாள படத்திலும், நவராசா என்ற தமிழ் படத்திலும், சகுந்தலம் என்ற தெலுங்கு படத்திலும் அதிதி பாலன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Aditi Balan

அதிதி நடிப்பில் தமிழில் அடுத்து வெளியாகவிருக்கும் ‘நவராசா’ ஒரு ஆந்தாலஜி படம் ஆகும். இதனை 9 இயக்குநர்கள் இயக்க, கொரோனாவால் உருக்குலைந்த தமிழ் சினிமா தொழிலார்களுக்கு உதவும் வகையில் மணிரத்னம் தயாரிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்