Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

5 தயாரிப்பாளர்கள் என்னை அனுபவிக்க பார்த்தார்கள்.! ஸ்ருதி ஹரிஹரன் மேடையில் அதிரடி வாக்குமூலம்.!

ஆணாதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் நேரம்  என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில், படத்தொகுப்பாளர் பீனா பால், நடிகைகள் ப்ரணீதா சுபாஷ் மற்றும் ஸ்ருதி ஹரிஹரன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாடினார்கள்.

அதில் பேசிய ஸ்ருதி ஹரிஹரன், தனக்கு நடந்த பாலியல் கொடுமையை கூறியுள்ளார் அவர் கூறியதாவது அன்று எனக்கு 18 வயது ஆகும். அது தான் என்னுடைய முதல் கன்னட படம் அந்த முதல் படத்திலேயே  எனக்கு பாலியல் தொந்தரவு ஏற்பட்டது.

அந்த சம்பவம் மிகவும் வேதனையையும் வலியையும் ஏற்படுத்தியது எனக்கு. நான் மிகவும் அழுதேன். அங்கு நடந்ததை பற்றி என்னுடைய டான்ஸ் மாஸ்டரிடம் சொன்னேன். அதற்கு அவர் கூறியதாவது, இந்த பிரச்னையை உன்னால் சமாளிக்க முடியவில்லை என்றால் இதில் இருந்து வெளியேறிவிடு என்றார்.

பின்பு நான் நடித்த கன்னட படம் ஒன்று மாபெரும் வெற்றி அடைந்தது. அந்த படத்தின் தமிழ் தயாரிப்பு உரிமையை ஒரு தயாரிப்பாளர் வாங்கினார். கன்னடத்தில் நான் நடித்த அதே கதாபாத்திரத்தில் எனக்கு வாய்ப்பு வழங்குவதாக அந்த தயாரிப்பாளர் கூறினார்.

அது மட்டும் இல்லாமல் படத்தை இன்னும் நான்கு பேர் சேர்ந்து தயாரிக்க உள்ளதாகவும், அவர்களுக்கு தேவைப்படும்போது என் உடலை பரிமாறி கொள்வார்களாம் இந்த பரிமாற்றத்திற்கு சம்மதித்தால் பட வாய்ப்பு தருவதாக கூறினார். உடனே நான் என்னுடைய காலில் இருக்கும் செருப்பை எடுத்து அவரிடம் காண்பித்தேன்.

இந்த சம்பவம் திரை உலகில் மிக மிக வேகமாக பரவியது. மேலும் பல தயாரிப்பாளர்கள் அந்த தயாரிப்பாளரிடம் போன் போட்டும், நேரில் சென்றும் சம்பவத்தைப் பற்றி கேட்டுள்ளார்கள்.அதுமட்டும் இல்லாமல்  என்னிடமும் அங்கு நடந்த சம்பவத்தைப் பற்றி கேட்டார்கள். அவர்களிடம் அங்கு நடந்ததை அப்படியே நான் சொன்னேன். இதனால் எனக்கு தமிழில் நல்ல படத்தில் வாய்ப்பு கிடைக்கவே இல்லை என கூறினார்  ஸ்ருதி ஹரிஹரன்.

இந்த கருத்தை பற்றி அங்கு அமர்ந்துள்ள சினிமா படத் தொகுப்பாளர் பீனா பால் பேசுகையில், சினிமாவில் பெண்களுக்கு எப்பொழுதும்  சம உரிமை கொடுக்க மறுக்கிறார்கள்.அதுமட்டும் இல்லாமல் பல திரைப்பட செட்களில் பெண்களுக்கு கழிப்பறை வசதி கூட செய்ய மறுக்கின்றனர்.

பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள் அனைத்தையும்  திரைத்துறையினர் பின்பற்ற மறுக்கின்றனர். இதை பற்றி யாரிடம் புகார் செய்வது என்றே தெரியவில்லை இந்த நிலைமை மாறினால் எடிட்டிங், மேக்அப், காஸ்டியூம் டிசைன் என பல துறைகளில் பெண்கள் இன்னும் அதிக அளவில் சினிமா துறையில் பெண்கள் நுழைவார்கள் என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top