பணத்துக்காக காதல் வலை விரித்த நடிகர்.. சிக்காமல் எஸ்கேப் ஆன ராதிகா

80 காலகட்ட தமிழ் சினிமாவை ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் தான் ஆட்சி செய்தனர். அவர்களுக்கு இணையாக பேரும், புகழும் பெற்று பிரபலமாக இருந்தவர் நடிகர் சுதாகர். இவர் நடிப்பில் வெளியான அத்தனை புகைப்படங்களும் பல நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

அதிலும் அவருடைய முதல் திரைப்படமான கிழக்கே போகும் ரயில் திரைப்படம் தியேட்டர்களில் ஒரு வருடம் ஓடியது. சிறு வயதிலேயே அதுவும் அறிமுகமான முதல் படமே அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. இதைத்தொடர்ந்து அவர் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார்.

கிழக்கே போகும் ரயிலில் சுதாகருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ராதிகா. அந்த படத்தில் அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் பொழுது ஒரு காட்சியில் சுதாகரின் விரல் நகம் ராதிகாவின் மேல்பட்டு சிறு கீறலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோபமான ராதிகா அவரை அந்த இடத்திலேயே அறைந்துள்ளார்.

ஆனால் அதன் பிறகு அவர்கள் இருவரும் சிறந்த நண்பர்களாக பழகி வந்தனர். மேலும் திரையில் அவர்களுடைய ஜோடிப் பொருத்தமும் அனைவராலும் வெகுவாக ரசிக்கப்பட்டது. இதனால் சுதாகர், ராதிகா இணைந்து நிறைய படங்களில் நடித்தனர். இந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மாறியது.

இருவரும் தீவிரமாக காதலித்து வந்த சமயத்தில் சுதாகரின் போக்கில் சிறு மாற்றம் தென்பட்டுள்ளது. அதாவது சுதாகர் காதலுக்கு முக்கியத்துவம் தராமல் ராதிகாவிடம் இருக்கும் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இதனால் சுதாரித்துக்கொண்ட ராதிகா சுதாகரை விட்டு விலகியுள்ளார்.

அதன் பிறகு சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்த சுதாகருக்கு நிறைய குடிப்பழக்கம் இருந்தது. சினிமாவில் பெயர், புகழ், பணம் என்று அனைத்தையும் பார்த்தவுடன் அவருக்கு சற்று தலைகனம் கூடியது. அதன் காரணமாக அவர் நடித்த திரைப்படங்களும் வரிசையாக தோல்வியை தழுவியது

இதனால் அவர் தமிழ் சினிமாவில் இருந்து முற்றிலும் ஓரம் கட்டப்பட்டார். தற்போது இவர் ஒரு சில தெலுங்கு படங்களில் காமெடியனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்