நளினி ஏன் ராமராஜனை விவாகரத்து செய்தார்.? அண்ணி என்று கூப்பிட்டு விட்டு தவறாக நடந்து கொண்டான்.!

தமிழ் சினிமாவில் 80களில் கொடிகட்டிப் பறந்த நடிகைகளில் ஒருவர் நளினி. இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாள ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர். அதே காலகட்டத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்த ராமராஜன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு அருணா, அருண் என்ற இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2000 ஆம் ஆண்டு நளினி-ராமராஜன் தம்பதியருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். அதன்பின்பு நளினி பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில், நாடகங்களில் நடிப்பதிலும் தற்போது ஆர்வம் காட்டி வருகிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஏன் விவாகரத்து செய்து கொண்டேன் என்பதற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். சென்னையில் பிறந்து வளர்ந்த நளினிக்கு, திருமணத்திற்குப் பிறகு கிராமத்தில் வாழ்வது கடினமாக தெரிந்ததாம்.

சின்ன சின்ன விஷயத்திற்கு கூட கணவன் மனைவி இடையே பெரும் சண்டை ஏற்பட்டு, யாரிடமும் சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளேயே அழுதுள்ளாராம். இதற்கு ஒரே வழி விவாகரத்து என்று முடிவெடுத்து ராமராஜனை நளினி விவாகரத்து செய்துவிட்டாராம்.

எனவே விவாகரத்து தான் தனக்கு கிடைத்த பெரிய ஆசீர்வாதம். விவாகரத்திற்கு பிறகு நிறைய கஷ்டத்தை அனுபவித்தாலும் நிம்மதி கிடைத்து என்று அந்தப் பேட்டியில் நளினி தெரிவித்துள்ளார்.

அது மட்டுமில்லாமல் நளினியை, அண்ணி என்று அழைத்தவர்கள், அவரிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்துள்ளனர். அதையெல்லாம் கடந்து தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் வளர்த்து தைரியமாக ஆளாக்கிள்ளேன் என்று நளினி தனது பேட்டியில் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்