Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
நிச்சயதார்த்தத்துக்கு பிறகு நடிகருடன் திருட்டு காதலா? நடக்க இருந்த திருமணத்தை நிறுத்திய பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் பிளேபாய் நடிகரின் தம்பியின் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் அந்த மலையாள வரவு. முதல் படமே ரசிகர்களை கவரும் அளவுக்கு அழகாக இருந்தார்.
அதனைத் தொடர்ந்து காலத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படம் சூப்பர் ஹிட்டாக தொடர்ந்து மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் பிஸியாகினர்.
பிறகு வழக்கம்போல முன்னணி கதாநாயகியாக மாற வேண்டும் என்ற வேகத்தில் சொதப்பலான கதைகளை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் சில தோல்விப் படங்களில் நடித்து தன்னுடைய கேரியரை கெடுத்துக் கொண்டார்.
இருந்தாலும் மலையாள சினிமாவில் அவரது பெயர் இன்னும் உச்சத்தில் தான் இருக்கிறது. சமீபத்தில் தான் அந்த நாயகிக்கு தனது நீண்டகால நண்பர் உடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
திருமணம் நிச்சயமானதற்குப் பிறகு மீண்டும் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் தற்போது திருமணம் வேண்டாம் என நிறுத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் கோலிவுட் வட்டாரங்களில் நிச்சயதார்த்தம் ஆன பிறகு பிரபல நடிகர் ஒருவருடன் அந்த நாயகிக்கு காதல் ஏற்பட்டதாகவும், அந்த நடிகர் கூறியதால் வேண்டுமென்றே நிச்சயதார்த்தம் ஆன நபருடன் பிரச்சினையை கிளப்பி கல்யாணத்தை தடுத்து விட்டாராம்.
அந்த நடிகர் யார் என கொலைவெறியில் தேடிக் கொண்டு இருக்கிறதாம் அந்த நடிகையின் குடும்பம்.
