இது ஒரு படமா கதையே இல்ல என கேட்ட விக்ரமன்.. நச்சுனு பதிலடி கொடுத்த தளபதி விஜய்

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக ஏராளமான ரசிகர் பட்டாளங்களை வைத்திருப்பவர் தளபதி விஜய். தற்போது அவர் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் தியேட்டரில் வெளிவர இருக்கிறது.

அவர் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் அவருடைய படங்கள் அவ்வளவாக ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. அப்பொழுது அவரின் சினிமா வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் பூவே உனக்காக.

அந்த திரைப்படத்தை இயக்குனர் விக்ரமன் இயக்கியிருந்தார். குடும்ப கதையை எடுப்பதில் வல்லவரான விக்ரமன் அந்தப் படத்தின் மூலம் விஜய்க்கு சினிமாவில் ஒரு புதிய அடையாளத்தை கொடுத்தார். அதன் பிறகு விஜய் நடித்த படங்கள் ஒவ்வொன்றும் தாறுமாறாக ஹிட்டடித்தது.

அப்படி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் குஷி. அதில் விஜய், நடிகை மும்தாஜ் உடன் இணைந்து நடித்த ஒரு கிளாமர் பாடல் அன்றைய இளைஞர்களை மிகவும் ரசிக்க வைத்தது. அந்த படத்தை குறித்து இயக்குனர் விக்ரமன், நடிகர் விஜய்யிடம் ஒரு முறை கேட்டிருக்கிறார்.

இந்தப் படத்தை நீங்க எப்படி செலக்ட் பண்ணீங்க, அதுல கதை ஒண்ணுமே இல்லையே என்று கேட்டிருக்கிறார். இதற்கு பதிலளித்த விஜய் நீங்கள் சொல்வது உண்மைதான், ஆனால் எஸ் ஜே சூர்யா கதை சொல்லி நீங்க கேக்கணும். அவர் கதை சொல்ற விதம் நீ வேற லெவல்ல இருக்கும்.

அவர் கதை சொன்ன விதத்தில் நான் ரொம்பவும் இம்ப்ரஸ் ஆகிட்டேன். அதனால்தான் இந்த படத்திற்கு நான் ஒத்துக் கொண்டேன் என்று விஜய் கூறியுள்ளார். குஷி படத்துக்கு முன்னர் விஜய் நடித்த மின்சார கண்ணா, நெஞ்சினிலே போன்ற எந்த படங்களும் சரியாக ஓடவில்லை.

இதனால் எப்படியாவது ஒரு வெற்றிப் படத்தை கொடுக்க வேண்டும் என்று காத்திருந்தவருக்கு கிடைத்தது தான் இந்த குஷி திரைப்படம். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்தடுத்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தார்.

அஜித் நடித்த வாலி திரைப்படத்திற்கு பிறகு எஸ் ஜே சூர்யா இயக்கிய இந்த திரைப்படம் விஜய்க்கு மட்டுமல்லாமல் அவருக்கு ஜோடியாக நடித்த ஜோதிகாவுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்