மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சிம்பு.. ரசிகர்கள் பிரார்த்தனை

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக தன் நடிப்பை தொடங்கி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படம் இதுவரை வெளியான சிம்புவின் திரைப்படங்களில் என்றும் இல்லாத அளவுக்கு அதிக வசூலை வாரி குவித்து வருகிறது. இதையடுத்து சிம்புவை தங்கள் படங்களில் புக் செய்ய தயாரிப்பாளர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இப்படத்தை தொடர்ந்து சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தலை, கொரோனா குமார் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். சர்ச்சைகளுக்கு பெயர் போன இவர் சமீப காலமாக எந்த சச்சரவுகளும் இன்றி நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

சிம்புவின் நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் இப்படம் குறித்து எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

தற்போது சிம்புவை பற்றிய முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சிம்பு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.

இதனால் சிம்புவின் ரசிகர்கள் பலரும் அவருக்கு என்ன ஆனது என்று கவலையுடன் கேட்டு வருகின்றனர். சிம்புவிற்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கொரோனா தொற்று ஏதும் இல்லை அவர் நலமாக இருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட சிம்புவின் ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்