ஒழுங்கா படம் நடிச்சா இது எல்லாம் தேவைப்படாது.. சாந்தனுவை சீண்டிய ரசிகர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி

தமிழ் சினிமாவில் பல வாரிசு நடிகர்கள் அறிமுகமானாலும், தங்களது திறமையினாலும் நடிப்பினாலுமே ரசிகர்களின் மனதைக் கவர்ந்து உச்ச நாயகர்களாக ஜொலிக்கின்றனர். அந்த வகையில் இயக்குனரும் நடிகருமான பாக்யராஜின் மகன் சாந்தனு, குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு நுழைந்தும் தற்போது வரை அவரால் நினைத்த அளவிற்கு சாதிக்க முடியவில்லை.

சாந்தனு கடைசியாக விஜயுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தில் நடித்த பின்பு சமூக வலைதளங்களில் சாந்தனுவை கேலி செய்யும் வகையில் நெட்டிசன்கள் பல மீம்ஸ்களை போட்டு ட்ரோல் செய்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக மாஸ்டர் படத்தில் வந்த பூனை கூட அதிக காட்சியில் நடித்தது என்று கிண்டலடித்தனர். இதற்கு பதிலளித்த சாந்தனு, மாஸ்டர் படத்தில் ஒரு சீனில் நடித்தாலும் மிகப்பெரிய படத்தில் என்னுடைய பங்களிப்பு இருக்கிறது. அதுவே என்னுடைய பெரிய சாதனை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். மேலும் இந்த படத்தின் மூலம் எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளனர் என்று கூறினார்.

அதன்பின்பு தற்போது மீண்டும் சாந்தனு காட்டமாக ரசிகர் ஒருவருடன் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஏனென்றால் சமீபத்தில் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில், ஹரிஸ் கல்யாண்னை டேக் செய்து, ‘ஏன் என்னை ஏமாற்றுனீங்கள், பதில் சொல்லுங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர் ஒருவர், ‘இது சாந்தனுவின் முருங்கக்காய் சிப்ஸ் படத்தின் ப்ரோமோஷன் வேலையாக இருக்கும்’ என்று கமென்ட் அடித்தார். மற்றொரு ரசிகர், ‘ஒழுங்கா படம் நடிச்சா இது எல்லாம் தேவைப்படாது’ என்று கேலி செய்தார்.

shanthanu-twit-cinemapettai
shanthanu-twit-cinemapettai

இதையெல்லாம் பார்த்த சாந்தனு, ‘மூளை வளர்ச்சி நல்லா இருந்தா இன்னொருத்தனை குறைசொல்ல தோணாது’  என்று பதிலளித்தார். இதற்கு அந்த நபர், ‘செய்த தொழில் சுத்தமாகவும், பக்தியும் இருந்தால் மனசு இப்படி மலிவா யோசிக்காது, போ ராஜா போ’ என பதில் ட்விட் செய்தார்.

மீண்டும் சாந்தனு, வளர்ப்பு நல்லா இருந்தா இப்படியெல்லாம் மத்தவங்கள பத்தி விசாரிக்காமல் விமர்சிக்க தோணாது, கிளம்பு மூஞ்சிய கூட ஒழுங்கா காமிக்காத உங்க கிட்ட பேசுறது எல்லாம் டைம் வேஸ்ட்’ என்று காட்டமாக தனது விவாதத்தை முடித்துக்கொண்டார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்