உண்மையைச் போன் போட்டு சொன்ன சிம்பு.. மணிரத்னத்தை மிரட்டிய ஜெயம் ரவி, விக்ரம்

சிம்பு நடிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ரிலீஸ் ஆன வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரிலீஸ் ஆகி வசூலை அள்ளிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக தேங்க்ஸ் மீட்களும் நடைபெற்று வருகிறது.

நடிகர் சிம்புவும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை பற்றியும் மற்றும் தன்னுடைய சினிமா பயணத்தை
பற்றியும் மனம் திறந்து பேசியிருக்கிறார். அவர் மீதான உருவ கேலி பற்றியும் பேசியிருந்த சிம்பு, மணிரத்னத்துடனான சினிமா அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.

Also Read: இதுவரை டிவி உரிமம் விற்கப்படாத 3 சிம்பு படங்கள்.. இதுல ரெண்டு சூப்பர் படமாச்சே!

சிம்பு மணிரத்னத்தின் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான செக்க சிவந்தது வானம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அர்விந்த் சுவாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, அதிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.

மணிரத்னம், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் வரும் 30 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா மூவியாக ரிலீஸ் ஆகிறது.

Also Read: சிம்பு நயன்தாரா பற்றிய ரகசியத்தை உளறிய இயக்குனர்.. பட புரமோஷனுக்காக போட்டுக்கொடுத்த பரிதாபம்

இந்த நிலையில் நடிகர் சிம்புவிடம் நீங்கள் ஏன் பொன்னியின் செல்வனில் நடிக்கவில்லை என்று கேட்டு இருக்கிறார்கள். அதற்கு பதில் அளித்த சிம்பு, பொன்னியின் செல்வனில் தான் முதலில் நடிக்க இருந்ததாகவும் , ஆனால் நடிகர்கள் ஜெயம் ரவியும், விக்ரமும் இணைந்து சிம்பு நடித்தால் நாங்கள் நடிக்க மாட்டோம் என கூறிவிட்டார்களாம்.

இதனால் தான் மணிரத்தினம் சிம்புவை நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை கை விட்டு விட்டதாகவும் நடிகர் சிம்புவே ஒரு யூடியூப் சேனலுக்கு போன் போட்டு சொல்லியிருக்கிறார். சிம்பு நடித்திருந்தால் ஒரு வேளை அவருக்கு வந்தியத்தேவன் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு இருக்கலாம்.

Also Read: நா துரோகியா, வாய் கூசாம பேசாதீங்க.. கதறி அழுது வீடியோ வெளியிட்ட கூல் சுரேஷ்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்