ராதிகா எடுத்த அதிரடி முடிவு.. மறுபடியும் முதல்ல இருந்தா என ஆடிப்போன கோபி!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பெரிய பிரச்சினையில் இருந்து வெளிவந்த பாக்யாவிற்கு அவளுடைய குடும்பம் பக்கபலமாக இருக்கிறது. இருப்பினும் கோபி, பாக்யாவிற்கு பிரச்சனையிலிருந்து மீண்டதற்கு ஆறுதல் தெரிவிக்காமல், இனிமேல் சமையல் ஆர்டரை எடுத்து செய்யும் தொழிலை நிறுத்தி விடு என கண்டபடி திட்டி தீர்த்தான்.

ஆனால் ராதிகாவிடம் மட்டும் அன்புடனும் பாசத்துடனும் பேசி ஆதரவாக இருப்பது சீரியல் ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமின்றி ராதிகா தற்போது பாக்யாவை சந்தித்து அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விரும்புகிறாள்.

இதனை கோபி இடமே சொல்லும்போது, அவன் பாக்யாவை சந்திக்க வேண்டாம் என்று ஏதேதோ காரணம் சொல்லி தடுக்கிறான். இப்பொழுதுதான் பாக்யாவும் ராதிகாவும் இந்தப் பிரச்சினையால் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டனர் என ஆனந்தத்தில் இருந்த கோபிக்கு ராதிகாவின் இந்த மனமாற்றம் பெரும் அதிர்ச்சியை தந்திருக்கிறது .

வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறுவது போல, எங்க போனாலும் சுத்தி சுத்தி அது இடத்திற்கே வருகிறார்களே என தலையில் அடித்துக்கொண்டு கோபி புலம்பிக் கொண்டிருக்கிறான்.

அத்துடன் தன்னுடைய குறுக்கு புத்தியால் ஒவ்வொரு முறையும் தப்பித்துக் கொண்டிருக்கும் கோபி கூடிய விரைவில் ஏதாவது ஒரு சூழ்நிலையால் பாக்யாவிற்கு கோபி-ராதிகா இருவரையும் தகாத உறவு தெரியவந்தால், அப்பொழுதுதான் கோபிக்கு இருக்குது வேட்டு.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்