சாப்பிடுவதற்கே வழி இல்லை.. தற்கொலை முடிவுக்கு வந்த பிக் பாஸ் நடிகை!

சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு பலரை வம்புக்கு இழுத்த இவர், மாடல் அழகியாக ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான். அந்த நிகழ்ச்சியிலும் சர்ச்சைக்குரிய நபராகவே ரசிகர்களால் பார்க்கப்பட்டார்.

அதுமட்டுமின்றி பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறாகப் பேசி, பல்வேறு அமைப்புகள் அளித்த புகாரின் பேரில் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்ட இவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டா.ர் அதன்பிறகு ஜாமீன் மூலம் வெளிவந்த இவர் தற்போது நிறைய பேட்டிகளை கொடுத்துக் கொண்டிருந்தார்.

பிறகு இவர் சிறைக்குச் செல்வதற்கு முன், ‘பேயை காணோம்’ என்ற படத்தில் நடித்ததால், அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. சிறைவாசம் அனுபவித்த பிறகாவது வாய் குறையும் என பார்த்தால் இவரைக் குறித்து ஏதாவது ஒரு சர்ச்சை சோசியல் மீடியாவில் எழுந்த வண்ணம் இருந்தது.

அதன் பிறகு மீண்டும் மீரா மிதுனை கைது செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த சூழலில் மீரா மீதும் தற்கொலை செய்துகொள்வதாக குறிப்பிட்ட பேட்டி ஒன்று தற்போது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அதில், ‘மீரா மிதுன் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாகவும், தனக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அதிகரித்து விட்டது.

சொந்தபந்ததால் நிராகரிக்கப்பட்டு சாப்பிடுவதற்கு வழி இல்லாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. நீதிமன்றத்திற்கு ஏறி இறங்கி அலைந்து திரிந்ததால் வருமானமே இல்லாததால் சாப்பிடுவதற்கும் வழியில்லை. இந்த சமூகம் என்னை வாழவிடாமல் செய்கிறது. இனிமேலும் இந்த சமூகம் வாழ விடவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன்’ என பகிரங்கமாக தற்கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்

இவ்வாறு மனம் உடைந்து கதறி அழுது புலம்பி இருக்கும் மீரா மிதுனின் வைரல் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள், ‘ஒருவர் அழுவதைப் பார்த்தால் சந்தோஷமாக இருப்பது என்றால் அது உங்களை பார்த்தால் மட்டும் தான்’ என கிண்டலடித்தனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்