திருட்டுத்தனமாக சாப்பிட்ட மூர்த்தி.. 3வது பிஸ்னஸ்க்கு அடி போடும் பாண்டியன் ஸ்டோர் மருமகள்

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 2-வது தம்பி கதிர், முல்லையின் மருத்துவ செலவிற்காக வாங்கிய 5 லட்சத்தை திருப்பி தர வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பிறகு அவர் ஹோட்டல் ஒன்றை துவங்கி அதில் முதல் நாள் வியாபாரம் பார்த்திருக்கிறார்.

முதல் நாளில் எவ்வளவு லாபம் வந்திருக்கிறது என முல்லையும் அக்கா மல்லி, முல்லையை வரவு செலவு கணக்கு பார்க்க சொல்கிறார். அதில் 1000 ரூபாய் நட்டம் ஏற்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொண்டதும் கதிரை ஏளனமாக மல்லி நக்கல் அடிக்கிறார். உடனே கதிர், ‘ஒரே மாதத்தில் இந்த கடையில் லாபம் வரும் என்பதை காட்டுகிறேன்’ என மல்லியிடம் சவால் விடுகிறார்.

Also Read: அண்ணாமலை ரேஞ்சுக்கு சவால்விட்ட கதிர், முல்லை!

முதல் நாளில் கதிரின் ஹோட்டலுக்கு வந்து சாப்பிட்ட அனைவரும் உணவு நன்றாக இருக்கிறது என்று சொன்னதால் அடுத்தடுத்த நாட்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகி, ஹோட்டல் தொழிலில் நிச்சயம் கதிர் கொடிகட்டி பறக்கப் போகிறார்.

மறுபுறம் கதிரின் கடை திறப்பு விழாவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஒருவர் மற்றவருக்கு தெரியாமல் கடைக்கு வந்து கதிரை வாழ்த்தினார்கள். மூர்த்தி கண்ணனிடம், எதுவும் தெரியாதது போல் கதிரின் கடையைப் பற்றி விசாரிக்கிறார். ஆனால் கண்ணன் பிடி கொடுத்து, எந்த பதிலும் சொல்லவில்லை. அந்த சமயம் மூர்த்தி, கதிரின் கடைக்கு சென்று சாப்பிட்டதை பெரிய ஏப்பம் விட்ட மாட்டிக்கொண்டார்.

Also Read: ஓசி சாப்பாட்டுக்கு ஓடோடி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!

மேலும் கதிரின் கடைக்கு சென்று அவருக்குத் தெரியாமல் முதல் வியாபாரத்தை நடத்தி வைத்த மூர்த்திக்கு, கூடுதல் உணவு பொட்டலங்களை கதிர் கொடுத்து அனுப்பியதால், அதை நல்லா மூக்கை பிடிக்க சாப்பிட்ட மூர்த்திக்கு அன்று முழுவதும் பசி எடுக்க வில்லை. இரவு உணவு சாப்பிட அனைவரும் மூர்த்தியை வற்புறுத்துகின்றனர்.

இருதய அறுவை சிகிச்சை செய்து இருக்கும் மூர்த்திக்கு சாப்பிடாமல் இருப்பதால் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டதா என குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைக்கின்றனர். உடனே மூர்த்தி, கதிரின் கடையில் சாப்பாடு வாங்கி வந்து சாப்பிட்டதை சொல்ல முடியாமல், வீட்டில் இருப்பவர்களின் திருப்திக்காக அவர்களுடன் அமர்ந்து இரவு உணவு சாப்பிடுகிறார்.

Also Read: டாப் 10 சீரியல் நடிகைகளின் மொத்த லிஸ்ட்.. முதலிடம் பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்!

மேலும் ஐஸ்வர்யா பியூட்டி பார்லர் ஆரம்பிப்பதற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரிடம் இன்று அனுமதி கேட்கப் போகிறார். ஏற்கனவே பாண்டியன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர், அதைத் தொடர்ந்து தற்போது கதிரின் பாண்டியன் ஹோட்டல், இதுவும் பத்தாது மூன்றாவதாக பாண்டியன் பியூட்டி பார்லர் ஒன்றையும் துவங்கப் போகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்