ரகசியத்தை வைத்து மிரட்டிய ஹேம்நாத்.. வேறு வழியில்லாமல் சித்ரா எடுத்த முடிவு

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகி தற்போது பரபரப்பை கிளப்பி வருகிறது. அவரின் மரணம் தற்கொலையா, கொலையா என்ற ரீதியில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பிரபல நாளிதழ் நமக்கு தெரியாத பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதில் சித்ராவின் பெற்றோர் கூறியதைப் போன்று இது கொலையாக இருக்க வாய்ப்பில்லை. சித்ரா தனக்கு இருந்த பிரச்சினைகளின் காரணமாக தான் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். மேலும் அவர் பட்டுப் புடவையை வைத்து தூக்கு போடும் போது பின்பக்கமாக போட்டதால் அவருக்கு முன் கழுத்தில் அடையாளம் தெரியாமல் இருந்துள்ளது.

அந்த சமயத்தில் அவர் தற்கொலை முடிவை மாற்றிக் கொள்ள நினைக்கும் போது முடிச்சை அவிழ்க்க அவர் போராடியதுதான் அவருடைய காயத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. மேலும் சித்ராவிற்கு போதை பழக்கம் இருந்ததாகவும், அவருடைய ஹேண்ட் பேக்கில் கஞ்சா லோடு செய்திருந்த 15 சிகரெட்டுகள் இருந்ததாக அவருடைய மரணத்தின்போது ஆய்வு செய்த போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி ஏற்கனவே நடிகை ரேகா நாயர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது சித்ராவுக்கு கஞ்சா, போதை, மதுப் பழக்கம் போன்ற அனைத்தும் இருந்துள்ளது என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ரேகா நாயர் கூறுவதைப்போல சித்ராவுக்கு பல அரசியல் புள்ளிகளுடன் தொடர்பு இருந்துள்ளது.

அதன் காரணமாக சில போதை மருந்து கும்பலுடன் தொடர்பு இருந்ததாகவும், அதன் மூலம் ஹேம்நாத் அவருக்கு பழக்கமானதாகவும் தெரியவந்துள்ளது. சித்ராவின் கனவருக்கும் அனைத்து கெட்ட பழக்கங்களும் இருந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர் சித்ராவின் சில திரைமறைவு ரகசியங்களை தெரிந்து கொண்டு மிரட்டியதால்தான் அவர் விருப்பம் இல்லாமல் அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்துள்ளார்.

மேலும் சித்ராவின் கணவரே அவரை பல அரசியல் புள்ளிகளுக்கு விருந்தாக்கியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையை தாங்க முடியாமல்தான் சித்ரா இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.

அவருடைய இந்த பிரச்சினை அனைத்தும் சித்ராவின் தாய்க்கு நிச்சயம் தெரியும். ஆனால் அவர் அந்த உண்மையை வெளியே கூறாமல் அமைதியாக இருக்கிறார். அவர் மட்டும் நடந்த விஷயங்களை வெளியில் கூறினால் ஹேம்நாத்தின் சுயரூபம் வெளியில் வரும். இது பல மர்மங்களுக்கு விடையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்